வாரத்தில் 10,000 பேருக்கு எபோலா தொற்று அபாயம்... பலி எண்ணிக்கை 4447 ஆனது!
ஜெனிவா: எபோலா நோய்க்கு இதுவரை 4,447 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், வாரத்திற்கு பத்தாயிரம் பேர் எபோலா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் நிலவுவதாகவும் அது கவலைத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா' என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்கி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,447 ஆகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அந்த அமைப்பின் துணை இயக்குநர் புரூஸ் ஆய்வார்டு ஜெனீவாவில் நேற்று கூறியதாவது :-
வேகமாகப் பரவுகிறது...
கடந்த இரண்டு மாதங்களாக எபோலா வைரஸ் காய்ச்சல் படுவேகமாகப் பரவி வருகிறது. வாரத்துக்கு 10 ஆயிரம் பேருக்கு எபோலா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தனி வார்டுகளில் சிகிச்சை...
சியரா லியோன், கினி, லைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
பலி...
தற்போது 4,447 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,914 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவி வரும் வேகத்தை பார்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும்...
ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டி இந்நோயின் தாக்கம் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் காணப்படுகிறது. அங்கும் சிலர் எபோலாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications