அரவக்குறிச்சி தேர்தல்..! மதியம் 1 மணியாகியும் முன்னணி நிலவரத்தை இணையத்தில் பதிவிடாத தேர்தல் ஆணையம்
சென்னை:தமிழகத்தில் அனைத்து தொகுதிகளின் முடிவுகள் பற்றி தகவல்களை இணையத்தில் வெளியிட்டு வரும் தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி தேர்தல் நிலவரத்தை பல மணி நேரம் சொல்லாமல் இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தே விட்டன. தமிழக இடைத்தேர்தல் முடிவுகளும் நிலைமையை சொல்லிவிட்டன. சில கட்சிகளின் உண்மை வாக்கு வங்கி என்பதும் வெளியே தெரிந்துவிட்டது.

பரபரப்பான தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பிலும் இருந்தும் வெளிப்பட்டு இருக்கும் நிலையில் ஒரேயொரு தொகுதியின் நிலவரத்தை மட்டும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருக்கிறது. அது அனைவரும் எதிர்பார்த்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல்.
காலை 8 மணி முதல் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. அனைத்து கட்சிகளும் அந்த முடிவுகளை பார்த்து வந்தன.தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக வந்திருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி இருந்திருக்கிறது.
அனைத்து தொகுதிகளை பற்றி முன்னணி நிலவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவாகின. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் மற்றும் மதியம் 1 மணியாகியும் பதிவாக வில்லை. அதனால் இணைய தளத்தை பார்த்து நிலவரத்தை அறிய சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து தான் முதல்கட்ட நிலவரத்தை இணைய தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது( அதாவது மதியம் 1 மணி அளவில்). கால தாமதம் ஆக என்ன காரணம் என்று தெரியவில்லை. மொத்தத்தில் நடுநிலையான முன்னணி நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் சற்றே அயர்ச்சியடைந்தனர் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications