கோவையைபோல் மற்றொரு கொடுமை.. பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல டாக்டருக்கு போலீஸ் வலைவீச்சு!
கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் ஒருவர் கரூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் (டாக்டர் சி.ஜி மருத்துவமனை) கேசியராக பணியாற்றி வருகிறார்.
Recommended Video
இவரது 17 வயது மகள் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 34 வயதுடைய பெண் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

டாக்டர் ரஜினிகாந்த்
தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் டாக்டர் ரஜினிகாந்த் தனது 17 வயது மகளை அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகாரில் அவர் கூறியுள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை
17 வயது சிறுமியை மருத்துவமனை மேனேஜர் சரவணன் மூலம் மருத்துவமனைக்கு வரவழைத்து அவரது அறையில் வைத்து டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டாக்டர் ரஜினிகாந்த், அவரது மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலாளர் கைது
மேலும் தலைமறைவாக இருந்த மேலாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் டாக்டர் ரஜினிகாந்த் தப்பி ஒடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல டாக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது கரூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சம்பவம்
ஆசிரியர் தொடரந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் கரூர் பகுதியில் மாணவிக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்தது கூடுதல் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications