மனசாட்சியே இல்லையா? நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர்! மூளைவளர்ச்சியற்ற மகனை 1.5 கிமீ சுமந்த தந்தை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது மூளை வளர்ச்சியற்ற மகனுடன் சென்ற தந்தையை பேருந்து நடத்துனர் பாதி வழியில் இறக்கி விட்டதால் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்றிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த தக்கேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.
ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி வாணிஸ்ரீ, 50 மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பேருந்தில் வந்துள்ளார்.

அதிர்ச்சி சம்பவம்
அப்போது அவரை பேருந்து நடத்துனர் ' இப்பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள்' எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார். இதையடுத்து மூளைவளர்ச்சியற்ற தன், 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் கூறுகையில்," "நான் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறேன். எனது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது.

மாற்றுத்திறனாளி மகன்
மாற்றுத்திறனாளியான அவனுக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்நிலையில் என் மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பேருந்து (TN29 2720) ஏறினேன். அப்போது நடத்துனரிடம் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் எனக்கூறி ஏறினோம்.

கல்நெஞ்ச நடத்துனர்
ஆனால் அப்பொழுது பேருந்து மாவட்ட ஆட்சியரகம் செல்லும் எனக்கூறி ஏற்றுக் கொண்ட பேருந்து நடத்துனர் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் பேருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லாது பாலத்தின் மேலே சென்று விடுவோம் நீங்கள் கீழே இறங்குங்கள்' எனக் கூறி தரக்குறைவாக பேசினார். மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்வதில் சிரமம் இருக்கும் எனக்கூறியும் அவர் நடுவழியில் இறக்கி சென்றுவிட்டார்.

கண்டுகொள்ளவில்லை
பேருந்து பாலத்தின் கீழே சென்று ஆட்சியராக அலுவலக நிறுத்தத்தில் நிறுத்தி சென்றாலும் மேலே செல்லும் தூரமும் கீழே செல்லும் தூரமும் ஒரே தூரம்தான் அதனால் பேருந்துக்கு எந்தவித காலதாமதமும் ஆகாத சூழ்நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் தூரத்திலேயே இறக்கி விட்டு சென்றது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே, 3 வருட பட்டா பிரச்னை, மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை" என கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications