பிரதமருக்கே இந்த நிலையா! பிரிட்டனில் போரிஸ் ஜான்சனுக்கு பைன்.. கொரோனா விதிமீறலால் போலீஸ் அதிரடி
லண்டன்: பிரிட்டனில் கொரோனா விதிகளை மீறி நடந்த விருந்து தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார். நிதி அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் உலக நாடுகளில் கொரோனா பரவியபோது பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தது. பிரதமர் போரிஸ் ஜான்சனும் பாதிக்கப்பட்டார். மேலும் நாட்டில் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஊரடங்கு மீறல்
இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது டவுனிங் தெருவில் உள்ள போரிஸ் ஜான்சனில் அலுவலகத்தில் விதிகளை மீறி கூட்டம் கூடியதாகவும், 2020 ஜூன் மாதம் 19ம் தேதி பிறந்தநாள் விழா பிரதமர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டதாக புகார் எழுந்தது.

விருந்து நிகழ்ச்சி
இந்த விழாவில் நடந்த விருந்தில் அதிகளவில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதில் நிதி அமைச்சர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஆகியோரும் பங்கேற்றதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகளை போரிஸ் ஜான்சன் மறுப்பு தெரிவித்தார். இதுபற்றி மெட்ரோபாலிட்டன் போலீசார் விசாரணை நடத்தினர்.

விதிமீறல் உறுதி
விசாரணையில் கொரோனா விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த எதிர்க்கட்சிகள் இருவரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இதற்கு போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் இருவரும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினர். இருப்பினும் எதிர்க்கட்சியினர் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அபராதம் விதிப்பு
இந்த நிலையில் கொரோனா விதிமுறையை மீறி நடந்த விருந்து நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்காக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கும் 50 பவுண்ட் முதல் 300 பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம்) வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

விதிமீறிய முதல் பிரதமர்
இந்த அபராதம் விதிக்கும் பட்சத்தில் விதிகளை மீறி அபராதம் செலுத்திய முதல் பிரதமர் என்ற பெயரை போரிஸ் ஜான்சன் பெறுவார். ஏனென்றால் இதுவரை பிரதமராக இருந்தவர்கள் தங்களது பதவி காலத்தில் விதிகளை மீறியதும், அபராதம் செலுத்தியதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications