20 கரப்பான் பூச்சிகள்.. ரூ.22 லட்சம் செலவு.. நூதன முறையில் பழிக்கு பழி!
இங்கிலாந்து நாட்டில் உள்ள லின்கான் நகரின் ஓரேகான் பகுதியில் சம்பள பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், ஹோட்டலுக்குள் 20 கரப்பான்பூச்சிகளை விட்டு நூதனமான முறையில் முதலாளியைப் பழி வாங்கியிருக்கிறார் ஊழியர் ஒருவர்.
லண்டன்: சம்பள பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், ஹோட்டலுக்குள் 20 கரப்பான்பூச்சிகளை விட்டு நூதனமான முறையில் முதலாளியைப் பழி வாங்கியிருக்கிறார் ஊழியர் ஒருவர்.
இலங்கிலாந்து நாட்டில் உள்ள லின்கான் நகரின் ஓரேகான் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் டாம் வில்லியம்ஸ் என்பவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டாம் வில்லியம்ஸ்க்கும் ஹோட்டல் நிர்வாகத்துக்கும். இடையே சம்பள பணம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வில்லியம் விடுமுறை எடுத்த நாட்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் சம்பளம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சம்பள பிரச்சினை
இதனால் கோபம் அடைந்த வில்லியம்ஸ், தனது சம்பள பணத்தை கேட்டு ஹோட்டல் முதலாளியிடம் பிரச்சினை செய்தார். ஆனால் பிடித்தம் செய்த சம்பளப் பணத்தை தர முதலாளி கண்டிப்பாக மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த வில்லியம்ஸ் முதலாளியை பழிவாங்க முடிவு செய்தார்.

கரப்பான் பூச்சிகள்
அதன்படி அவர் ஹோட்டல் சமையல் அறையில் கரப்பான் பூச்சிகளை விட முடிவு செய்தார். இதுகுறித்து முதலாளிக்கு மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுக்கவும் வில்லியம்ஸ் துணிந்தார். மிரட்டல் விடுத்தவாறே அதனை செய்தும் காட்டிவிட்டார் அவர். ஹோட்டலின் சமையல் அறையில் நுழைந்த வில்லியம்ஸ் தான் கொண்டு வந்திருந்த 20 கரப்பான் பூச்சிகளை அங்கே விட்டார்.

சிறை தண்டனை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் முதலாளி வில்லியம்ஸை வேலையைவிட்டு நீக்கியதுடன், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் வில்லியம்ஸை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வில்லியம்ஸ்க்கு 17 மாதங்கள் சிறை தண்டனை அளித்துள்ளது.

ரூ.22 லட்சம் செலவு
தனக்கு சம்பளம் பிடித்தம் செய்த ஹோட்டல் முதலாளியை பழிவாங்க கரப்பான் பூச்சிகளை ஆயுதமாக பயன்படுத்திய வில்லியம்ஸ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். வில்லியம்ஸ் செய்த செயலால் ஹோட்டலை சுத்தம் செய்ய ரூ.22 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார் அந்த முதலாளி. இந்த சம்பவம் அந்நாட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications