பாகிஸ்தானுக்கு போக கூறிய எஸ்.பி.மீது நடவடிக்கை... மத்திய அமைச்சர் உறுதி
லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை, பாகிஸ்தானுக்கு சென்று விடுமாறு கூறிய எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உறுதியளித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி மீரட்டில் இஸ்லாமியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சென்ற எஸ்.பி.அகிலேஷ் சிங், சாப்பிடுவது இங்கே, புகழ்பாடுவது மற்றவர்களுக்கா எனக் கேள்வி எழுப்பியதோடு, பேசாமல் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுமாறு கூறியிருந்தார்.

சர்ச்சை
எஸ்.பி.அகிலேஷ் சிங்கின் இந்தக் கருத்து இஸ்லாமியர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.அகிலேஷ் சிங் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பான புகார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடமும் கொண்டு செல்லப்பட்டது.

உறுதி
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து பாகிஸ்தானுக்கு சென்று விடுமாறு கூறிய எஸ்.பி.அகிலேஷ் சிங் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாமும் அது குறித்த தனது வருத்தத்தை யோகி ஆதித்யநாத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மிரட்டல்
மேலும், போராட்டக்காரர்களை பார்த்து எச்சரிக்கும் தொணியில் பேசிய எஸ்.பி.அகிலேஷ் சிங், இந்த நொடி முதல் உங்களுக்கு இருண்ட காலம் தான் என சவாலும் விடுத்திருந்தார். இதுவும் இஸ்லாமிய அமைப்புகளின் கடும் கண்டனத்தை பெற்றது.

வன்முறை
நாட்டில் காவல்துறையினரிடம் இருந்தோ, கும்பலிடம் இருந்தோ வன்முறை கருத்துக்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குற்றமற்றவர்களின் மனது காயப்படக் கூடாது என்பதில் போலீஸ் கவனமுடம் இருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications