அயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு!
கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் இன்று சரயு நதியில் 5 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
லக்னோ: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு அயோத்தியில் இன்று சரயு நதியில் 5 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது. எல்லா வருடமும் தீபாவளிக்கு பிறகு இந்த கார்த்திகை பூர்ணிமா விழா அயோத்தியில் சரயு நதியில் நடக்கும். சரயு நதியில் இறங்கி மக்கள் புனித நீராடுவார்கள்.
இதன் மூலம் மக்களின் பாவங்கள் கழுவப்பட்டு, எல்லோரும் நன்மை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதில் எப்போதும் பல்லாயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு
இந்த நிலையில் அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் இன்று நடக்கிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது. நேற்றே சரயு நதியில் இறங்கி மக்கள் நீராட தொடங்கிவிட்டனர்.

அதிகம்
சரயு நதியில் நீராடுவதற்காக மக்கள் தற்போது அங்கு அதிக எண்ணிக்கையில் படையெடுத்து வருகிறார்கள். இன்று சுமார் 4-5 லட்சம் பேர் அங்கு வழிபாடு நடத்தலாம். மொத்தமாக இரண்டு நாட்களில் 7 லட்சம் பேர் அங்கு வழிபாடு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்பிற்கு தனி மாற்று இடம் கொடுக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

போலீசார்
இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் இந்த விழா நடக்க உள்ளது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் வரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
|
எல்லாம் தயார் நிலை
தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவப்படை எல்லாம் அங்கு தயார் நிலையில் இருக்கிறது. 18 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டு மருத்துவர்களும் பணி செய்து வருகிறார்கள். இதனால் அந்த விழா மீதான எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications