மதுரா கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு வழிபாடு.. முண்டியடித்த கூட்டம்.. மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பலி!
லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பன்கே பிஹாரி கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணன் பிறந்த இடமாக இந்த மதுரா கருதப்படுகிறது.

ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பன்கே பிஹாரி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

மூச்சு விட முடியாமல் திணறினர்
தொடர்ந்து கோவிலில் மங்கள ஆரத்தி நிகழ்வின் போது, பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கோவில் வளாகத்திற்குள் செல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறினர். இதில் சில பக்தர்கள் அப்படியே மயங்கி கீழே சுருண்டு விழுந்தனர்.

2 பக்தர்கள் பலி
ஒருவர் இருவர் அல்ல... ஒரு 6 அல்லது 7 பேர் மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஆண் பக்தரும் பெண் பக்தர் ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோல் மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
இதற்கிடையே சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் நிர்மலா தேவி, ராம் பிரசாத் ஆகிய இருவர் என்று போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியானதால், அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications