மதுரா கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு வழிபாடு.. முண்டியடித்த கூட்டம்.. மூச்சுத்திணறி 2 பக்தர்கள் பலி!
லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பன்கே பிஹாரி கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
நாடு முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கிருஷ்ணன் பிறந்த இடமாக இந்த மதுரா கருதப்படுகிறது.

ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ஆக்ராவில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பன்கே பிஹாரி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக கோவிலில் நள்ளிரவு நடந்த சிறப்பு வழிபாட்டை காண ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

மூச்சு விட முடியாமல் திணறினர்
தொடர்ந்து கோவிலில் மங்கள ஆரத்தி நிகழ்வின் போது, பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கோவில் வளாகத்திற்குள் செல்ல முற்பட்டதாக தெரிகிறது. இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றதால் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் திணறினர். இதில் சில பக்தர்கள் அப்படியே மயங்கி கீழே சுருண்டு விழுந்தனர்.

2 பக்தர்கள் பலி
ஒருவர் இருவர் அல்ல... ஒரு 6 அல்லது 7 பேர் மயங்கி விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஆண் பக்தரும் பெண் பக்தர் ஒருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதேபோல் மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் விசாரணை
இதற்கிடையே சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் நிர்மலா தேவி, ராம் பிரசாத் ஆகிய இருவர் என்று போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியானதால், அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications