திருமண நிதிக்காக தங்கையை மணமுடித்த இளைஞர் .. ஆப்பு வைத்த அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாநில அரசின் திருமண நிதி உதவி பணத்தைப் பெறுவதற்காக இளைஞர் ஒருவர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்ய மந்திரி சமூஹிக் விவாஹ் யோஜனா எனப்படும் முதலமைச்சரின் சமூக திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு திருமணம் செய்யும் ஒவ்வொரு தம்பதிக்கும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசுகளாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின்படி மக்களின் வங்கிக் கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் மற்றும் தம்பதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

திருமண நிதியுதவி

திருமண நிதியுதவி

குறிப்பாக மணமகள் விதவையாகவோ அல்லது விவாகரத்து பெற்றவராக இருந்தால் அவரது கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 5,000 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் திட்டத்தை பெறுவதற்காக இளைஞர் ஒருவர் தனது சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெகுஜன திருமணம்

வெகுஜன திருமணம்

உத்தரப் பிரதேசத்தில் ஃபெரோஷாபாத்தில் சமூக நலத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த வெகுஜன திருமண நிகழ்வு பிளாக் டெவலப்மன்ட் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த ஒரு ஜோடியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கிராம மக்கள் உதவியுடன் அதிகாரிகள் சரி பார்த்தனர்.

மணமக்கள் ஆன தங்கை

மணமக்கள் ஆன தங்கை

அப்போது திருமண நிகழ்வுக்காக வந்திருந்த ஒரு ஜோடி அண்ணன் தங்கை என்பது தெரிய வந்தது இதுகுறித்து அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டியதை அடுத்து அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மோசடி

ஏற்கனவே மோசடி

அரசாங்க திட்டத்தின் பலன்களை பெறுவதற்காக போலி ஜோடிகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் பணப் பலன்களை பெற ஏற்கனவே திருமணமான 12 ஜோடிகள் ஷாம்லியில் மீண்டும் திருமணம் செய்து கொண்டதும் இதையடுத்து அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+