எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அகிலேஷ் யாதவ்? - மிகப்பெரிய முடிவுக்கு காரணம் இதுவா?
லக்னோ: நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால், கர்ஹால் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமாக தோற்றது. அதனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக பிரசாரம் செய்தது சமாஜ்வாதி கட்சி. ஆனாலும் பாஜகவிடம் தோற்று, ஆட்சி அமைக்கமுடியாமல் போனது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 403 தொகுதிகளில் 126 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி பலமாக உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜினாமா
அகிலேஷ் யாதப் ராஜினாமா செய்கிறார் என்ற செய்தி கேட்டு அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எம்.எல்.ஏவாக பதவி ஏற்கும் முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது. சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்காமல் தோற்றதால், இந்த முடிவை எடுப்பதாக சொல்லப்பட்டாலும், அதுமட்டுமே காரணம் இல்லை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

காரணம் என்ன?
அகிலேஷ் யாதவ் தற்போது அஸாம்கர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சட்டசபை உறுப்பினராக தன்னுடைய பயணத்தை தொடர விரும்பாத அகிலேஷ் யாதவ், அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர விரும்புகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.

மம்தா பானர்ஜி
2024 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸுடன் சேர்ந்து சந்திக்க தயார் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் உத்தரப்பிரதேச தோல்வி கண்டு துவண்டுபோக வேண்டாம் என அகிலேஷ் யாதவுக்கு மம்தா ஆறுதல் கூறியுள்ளார். மம்தா தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால், அதில் அகிலேஷ் யாதவ் முக்கிய நபராக இருப்பார். அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். பொதுத்தேர்தலை மனதில் வைத்து, இப்போதே அதற்கு தயாராகும் வேலையில் அகிலேஷ் யாதவ் இறங்கிவிட்டதாக அறியப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications