பாஜக குஷ்புவுக்கு வந்த கோபம்.. "இப்படியா கொல்வது? மனித உயிர்களைவிட எதுவும் முக்கியமில்லை".. ஆவேசம்
உபியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்
லக்னோ: உபியில் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜகவின் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்... "மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை... மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடமாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன..
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

எதிர்ப்பு
இந்நிலையில், லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதில் உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்றார்.. ஆனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் செய்து வாகனத்தை முற்றுகையிட்டனர்... பிறகு விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

உயிரிழப்பு
கொஞ்ச நேரத்தில் இது வன்முறையாக மாறியது.... அப்போது, ஒரு ஜீப் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதுடன் நிற்காமல் சென்றது... இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.. இதனால் உபி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அந்த மாநில முதல்வர் யோகி உத்தரவிட்டு உள்ளார்.

காங்கிரஸ்
இதனிடையே, விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... இதையொட்டி பல தலைவர்கள் தங்கள் கண்டனங்கடிளை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துளளார்.. இது குறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
|
குற்றம்
அதில், "உத்தரபிரதேசத்தில் 8 போராட்டக்காரர்களை கார் ஏற்றி கொன்றிருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, எதையும் பொருட்படுத்தாமல், உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்... மனித உயிர்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை... மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்'' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications