இரண்டாவது முறை முதல்வரானதும்.. முதல் கேபினட் கூட்டத்தில் யோகி எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 2வது முறையாக நேற்று யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து இன்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மாநிலத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்தை 3 மாதம் நீட்டிப்பு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 18 இடங்களில் வென்றன.
இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று மாலை யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்று கொண்டார்.

மோடி பங்கேற்பு
பிரமாண்டமாக நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இதையடுத்து 52 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வர்களாக செயல்படுவர். மொத்தத்தில் 18 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 1 4 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 20 இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.

அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னோ லோக்பவனில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் வழங்கப்பட்டு வரும் இலவச ரேஷன் திட்டத்தை 3 மாதம் வரை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து இத்திட்ட நீட்டிப்புக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

15 கோடி மக்கள் பயன்
இதுபற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‛‛பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை மார்ச்31ல் இருந்து ஜூன்30 வரை நீட்டிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் மாநிலத்தில் 15 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். முதல் அமைச்சரவை கூட்டத்தின் முதல் முடிவான இது வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்படும்'' என்றார்.

ஏழைகளின் நலன்...
இதுகுறித்து துணை முதல்வர் பிரஜேஷ் பதாக் கூறுகையில், ‛‛உத்தர பிரதேசத்தில் மேலும் 3 மாதம் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். இத்திட்டம் கொரோனா பரவல் அதிகமான 2020ம் ஆண்டில் இருந்து உத்தர பிரதேசத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications