பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுதான் பாஜக அரசின் முதன்மையான பணி! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் தொகையை உயர்த்தியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக பல்வேறு புதிய திட்டங்களை யோகி அறிவித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்திருந்த முதலமைச்சரின் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் தொகையை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தின் இரட்டை என்ஜின் அரசு, கன்யா சுமங்கலா திட்டத்தின் தொகையை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த இருக்கிறது. இந்த உத்தரவு 2024-2025ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவும், கல்வியை பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்கவும் இந்த திட்டம் பயன்படும். முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், ஆறு கட்டங்களாக, 15,000 ரூபாய் தொகுப்பு வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல், மகள் பிறந்தவுடன், அவரது பெற்றோர் கணக்கில், 5,000 ரூபாய் செலுத்தப்படும். அதேபோல், மகளுக்கு, ஒரு வயது நிறைவடையும் போது, 1ம் வகுப்பு படிக்கும் போது, 2,000 ரூபாய் மாற்றப்படும். ரூ.3,000; ஆறாம் வகுப்பில் சேரும்போது, ரூ.3,000; ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தால், ரூ.5,000; மகள் பட்டதாரி, டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்தால், ரூ.7,000 அவரது கணக்கிற்கு மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் இன்று மாநிலத்தில் 16.24 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
உத்தரப்பிரதேச அரசை பொறுத்த அளவில் பெண்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications