குண்டும் குழியுமாக உள்ள சாலைகளுக்கு முடிவு.. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாலைகளை வரும் தீபாவளிக்குள் மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த சாலைகளை தரமானதாக மாற்ற பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்குள் உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"இந்த ஆண்டு பருவமழை வழக்கத்திற்கு மாறாக பெய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் மழை தீவிரமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல சாலைகளை தயார் செய்ய வேண்டியது அந்தந்த துறையின் பொறுப்பாகும். குறிப்பாக குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பொதுப்பணித்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மண்டி பரிஷத், நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், சர்க்கரை தொழில் மற்றும் கரும்பு மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பெரும்பாலும் சாமானியர்கள்தான் பயன்படுத்துகின்றனர். எனவே சாமானியர்களுக்கு சாலையில் பயணிப்பதை இனிமையான அனுபவமாக மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆகவே காலம் தாழ்த்தாமல் வரும் தீபாவளிக்குள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் சரி செய்யப்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications