மதரசா பள்ளிகளுக்கு யோகி அரசு கிடுக்கிப்பிடி.. கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு மானியத்தில் செயல்படும் 560 மதரசா பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு மதரசா பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற மதரசா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. இதில் 560 பள்ளிகள் அரசு மானியத்துடன் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் மதரசா பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் தான் மதரசா பள்ளிகளின் ஒருசில இடங்களில் தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாடுவது இல்லை என்ற புகார் எழுந்தன. இதுபற்றி உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்ட்டது. அப்போது அனைத்து மதரசா பள்ளிகளிலும் தேசியக்கீதம் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் மார்ச் 24ல் நடந்தது. இதை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் துவங்கின.

மீண்டும் பள்ளிகள் திறப்பு
இதற்கிடையே, ரம்ஜான் மாதத்தையொட்டி மதரசா பள்ளிகளுக்கு மார்ச் 30 வரை மே 11 வரை விடுமுறை அளிக்கப்பட்டன. இதையடுத்து அந்த முடிவு நிலுவையில் இருந்தது. தற்போது ரம்ஜான் விடுமுறை முடிந்து மீண்டும் மதரசா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மதரசா பள்ளிகளுக்கு வர துவங்கி உள்ளனர்.

தேசியகீதம் கட்டாயம் என உத்தரவு
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மதரசா கல்வி வாரியத்தின் பதிவாளர் எஸ்என் பாண்டே அனைத்து மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் இறைவணக்கத்தின்போது ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக தேசிய கீதம் பாட வேண்டும். இதை பின்பற்றுவதை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் கூறுவது என்ன?
இதுபற்றி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டேனிஷ் அசாத் அன்சாரி கூறுகையில், ‛‛சிறுபான்மை மக்களுக்கு மதரசா பள்ளியின் கல்வி முக்கியமானது. இதனுடன் தேசியகீதம் பாடும்போது அவர்கள் சமூகத்தின் மதிப்பை நன்கு அறிவார்கள். இப்போது கணிதம், அறிவியல் கணினி உள்ளிட்ட பிற பாடங்களுடன் இஸ்லாமிய மதநூல்களையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநில அரசு மதரசா பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications