Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்குறுதியை அள்ளி வீசிய ராஜ்நாத்சிங் “வேலை எங்கே” என முழக்கமிட்ட இளைஞர்கள்.. பரபரத்த உபி பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு கோபத்துடன் முழக்கமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு உபியில் முடிவடைந்துள்ளது.

முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நாளை 3ஆம் கட்ட வாக்குப் பதிவு அங்கு நடைபெறவுள்ளது.

3ஆம் கட்ட தேர்தல்

3ஆம் கட்ட தேர்தல்

கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு நிலையில், அந்த பகுதிகளில் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையொட்டி இந்த தொகுதிகளில் நேற்று பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வேலை வாய்ப்பு இல்லை

வேலை வாய்ப்பு இல்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் தனது அரசு வழங்கியுள்ளது என முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறியிருந்த நிலையில் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும் நிலையில் அகிலேஷ் யாதவ் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளை முறை படுத்துவதாகவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

ராஜ்நாத் சிங் பிரச்சாரம்

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள் குறித்து பேசிய அவர் உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒளி மற்றும் தீபாவளியின் போது பாஜக அரசு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்கும் என பேசினார்.கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த இளைஞ்ஞர்கள் திடீரென்று வேலை வாய்ப்பு கேட்டு கோபமாக முழக்கமிட்டனர். குறிப்பாக இந்திய ராணுவத்தில் வேலை தேடும் இளைஞர்கள் ராஜ்நாத் சிங்கை நோக்கி கோபமாக கேள்வி எழுப்பினர்.

விரைவில் நடவடிக்கை

விரைவில் நடவடிக்கை


ராணுவத்தில் ஆட்சேர்ப்பை தொடங்குங்கள், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அவர்கள் சத்தமாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவர்களைப் பார்த்த ராஜ்நாத் சிங் அது நடக்கும் கவலைப்பட வேண்டாம், உங்கள் கவலை எங்களுக்கு உள்ளது, கொரோனா வைரஸ் காரணமாக சில சிரமங்கள் இருந்தன என்றும் விரைவில் அவை பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் விளக்கியதையடுத்து, அந்த இளைஞர்கள் பாரத் மாதா கி ஜே என கூறி அமர்ந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+