காப்பீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கியமான தீர்ப்பு
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக 2015-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அரசு ஊழியர்கள் சிகிச்சை செலவுத்தொகை முழுவதையும் வழங்க உரிமை கோர முடியாது என்றும், மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான் என்றும் கூறியுள்து.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர், கடநத 2015ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, மனுதாரருக்கு உரிய சிகிச்சை தொகை முழுவதையும் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2018-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

மேல்முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2019-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவச் செலவுகள் வேறுபடலாம். அந்தந்த தொகையை அரசு செலுத்துவது என்பது கடினம் ஆகும். எனவே, அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்கான தொகை உச்சவரம்பை அரசு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, மனுதாரர் சிகிச்சை பெற்ற வகையில் ரூ.2 லட்சத்தை பெற உரிமை உண்டு என வாதிட்டார்.
நிபந்தனை இல்லை
விசாரணை முடிவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மருத்துவ காப்பீட்டு திட்டம், ஒரு நலத்திட்டம் ஆகும். ஆனால் இதனை சேவை நிபந்தனைகளில் ஒன்றாக அரசு ஊழியர்கள் கருத இயலாது. இது, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வசதி மட்டுமே. எனவே, இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு கவனமுடன் செயல்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மேலும் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஒரு சிறப்புத் திட்டமாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை தகுதி மற்றும் வரம்பின் அடிப்படையில் உறுதி செய்து செயல்படுத்த வேண்டும். அதன்படி மனுதாரர் தனக்கு சிகிச்சைக்காக செலவு செய்த தொகை முழுவதையும் வழங்கும்படி உரிமையாக கோர முடியாது. இதனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
மருத்துவ காப்பீட்டு உச்சவரம்பு
இதில் உச்சவரம்பை கருத்தில் கொள்ளாமல் முழு மருத்துவச் செலவையும் வழங்கினால், அது அரசு ஊழியர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மேலும் மருத்துவச் செலவுகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். அரசு ஊழியர்களிடையே சமமான தன்மையை பேணுவதற்காக சிகிச்சைக்கான செலவை திரும்ப பெறுவதில் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications