Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காப்பீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய முக்கியமான தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர் உடல் நலக்குறைவு காரணமாக 2015-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அரசு ஊழியர்கள் சிகிச்சை செலவுத்தொகை முழுவதையும் வழங்க உரிமை கோர முடியாது என்றும், மருத்துவக்காப்பீடு என்பது கூடுதல் வசதிதான் என்றும் கூறியுள்து.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேரி திலகவதி என்ற அரசு ஊழியர், கடநத 2015ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றார். இதற்கான முழு சிகிச்சை தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, மனுதாரருக்கு உரிய சிகிச்சை தொகை முழுவதையும் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2018-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

Can government employees claim the entire medical expenses from insurance What is the HC verdict

மேல்முறையீடு

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2019-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசு ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவச் செலவுகள் வேறுபடலாம். அந்தந்த தொகையை அரசு செலுத்துவது என்பது கடினம் ஆகும். எனவே, அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறுவதற்கான தொகை உச்சவரம்பை அரசு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, மனுதாரர் சிகிச்சை பெற்ற வகையில் ரூ.2 லட்சத்தை பெற உரிமை உண்டு என வாதிட்டார்.

நிபந்தனை இல்லை

விசாரணை முடிவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மருத்துவ காப்பீட்டு திட்டம், ஒரு நலத்திட்டம் ஆகும். ஆனால் இதனை சேவை நிபந்தனைகளில் ஒன்றாக அரசு ஊழியர்கள் கருத இயலாது. இது, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வசதி மட்டுமே. எனவே, இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு கவனமுடன் செயல்படுத்த வேண்டும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

மேலும் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஒரு சிறப்புத் திட்டமாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை தகுதி மற்றும் வரம்பின் அடிப்படையில் உறுதி செய்து செயல்படுத்த வேண்டும். அதன்படி மனுதாரர் தனக்கு சிகிச்சைக்காக செலவு செய்த தொகை முழுவதையும் வழங்கும்படி உரிமையாக கோர முடியாது. இதனை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.

மருத்துவ காப்பீட்டு உச்சவரம்பு

இதில் உச்சவரம்பை கருத்தில் கொள்ளாமல் முழு மருத்துவச் செலவையும் வழங்கினால், அது அரசு ஊழியர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கள் விருப்பப்படி சிகிச்சை பெறும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மேலும் மருத்துவச் செலவுகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். அரசு ஊழியர்களிடையே சமமான தன்மையை பேணுவதற்காக சிகிச்சைக்கான செலவை திரும்ப பெறுவதில் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+