இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் ராமர் மற்றும் லட்சுமணர் மாதிரி... சொல்வது அமைச்சர் உதயக்குமார்
முதல்வர் - துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் துணை முதல்வர் இடையே எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இருவரும் ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணர் போலவும் உள்ளதாக கூறியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.
முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியாக இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தினசரியும் புது புது செய்திகள் வெளியாகி வருகிறது. அரசு விழாக்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து பங்கேற்பதில்லை என்ற புகார் எழுந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்த புகாரை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மறுத்துள்ளார். இருவரும் முக்கிய முடிவுகளை இணைந்துதான் எடுக்கிறார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிவித்தார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இணைந்து முதல்வரும் துணைமுதல்வரும் பங்கேற்றனர். காமராஜர் மணி மண்டபத்தில் இருவரும் இணைந்தே அஞ்சலி செலுத்தினர்.
இன்று மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியடிகள் 2119 நாட்கள் சிறையிலடைக்கப்பட்ட நிலையிலும் நாட்டிற்கு அஹிம்சையை கற்றுக்கொடுத்தவர். தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தியவர். பொறுமை, பெருந்தன்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லில் சொல்லாமல் செயலில் செயலாற்றி காட்டியவர் காந்திஜி எனவும் தெரிவித்தார்.
திமுகவுக்கு மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலி பானையாக அக்கட்சி உள்ளது. அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து ஒற்றுமை ஏற்பட்டு தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.
முதல்வர் துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள். வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள் என்றார். வரும் 7ம் தேதி தலைமை அறிவிக்கும் கருத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications