மதுரை ஜல்லிக்கட்டு திருவிழா...சிறப்பு விருந்தினராக பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மதுரை : 2022ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டியும், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அமைதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் 15-ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
மேலும் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக அரசை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு குழுவினர், நாட்டு மாடுகளை மட்டுமே போட்டியில் அனுதிக்கப்படும் என அறிவித்த அமைச்சருக்கு நன்றி கூறியும் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், தருமபுரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்கவேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை பொதுக்குழு கூட்டத்திற்குப் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் உறுதிப்படுத்தினார். மேலும் 600 இடங்களுக்கு பதிலாக தற்போது 100 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாகவும், மற்ற மாவட்டங்களில் போட்டிகள் நடத்த அந்தந்த ஆட்சியர்கள் அனுமதி தரவேண்டும் எனவும் ராஜசேகர் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications