மதுரை மாநகராட்சி ஆபிசர் ஆறுமுகத்துக்கு ஆசிரியரால் கண்டம்.. கையும் களவுமாக சிக்கி அசிங்கமா போச்சு
மதுரை: மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 74 வயதாகும் பரசுராமன் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஆவார். இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது மூத்த மகன் ஈஸ்வர கண்ணனுக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறார். தொடர்ந்து தன் மகனுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான சொத்தை பெயர் மாற்றம் செய்வதற்கு மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கடந்த 13-ந் தேதி விண்ணப்பித்துள்ளார்.

ஓய்வு பெறற ஆசிரியர் பரசுராமனின் மனு, மதுரை மாநகராட்சி மண்டல பிரிவு அலுவலகமான கண்ணனேந்தல் பகுதியில் உள்ள மாநகராட்சி வரிவசூல் செய்யும் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அந்த மனுமவினை மாநகராட்சி 6-வது வார்டு பில் கலெக்டர் ஆறுமுகம் (50) விசாரணை நடத்தி உள்ளார். இவர் சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை 15-ந் தேதி அவரும், அவரது உதவியாளரும் உறவினருமான சுதாகர் (25) ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து ஆய்வு செய்த இடத்தை முழுவதும் அளந்து பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனே கையெழுத்து போட்டு தருவதாக பில் கலெக்டர் ஆறுமுகம் தெரிவித்தாராம். ஆனால் பரசுராமன், நான் ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கெஞ்சியுள்ளார். அதைதொடர்ந்து ரூ.15 ஆயிரம் என்று பேரம் பேசி இருக்கிறார்கள். இறுதியாக ரூ.10ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தாராம் ஆறுமுகம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமனிடம் ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். நேற்று காலை போலீசாரின் அறிவுரைப்படி, பரசுராமன் அந்த பணத்துடன் கண்ணனேந்தல் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மதுரை லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் போலீசார் மறைந்து நின்றிருந்தார்கள். பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரூ.10 ஆயிரத்தை பரசுராமன் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை அவர் வாங்கி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்துதிருக்கிறார்.. உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த நடவடிக்கை மதுரை மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தர்மபுரி பரிமளா வீட்டில் டக்னு நுழைந்த அரசு ஆபீசர்ஸ்.. 47 வயசு சாந்தி கிட்ட அபார்ஷன் மாத்திரை? ஷாக் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன்












Click it and Unblock the Notifications