சஹ்யோக்னா என்ன? இந்தி வெறியர்கள்! மத்திய ரயில்வே முடிவால் கொதித்து போன எம்.பி சு.வெங்கடேசன்!
மதுரை: ரயில் நிலைய உதவி மையங்களின் பெயரை இந்தியில் 'சஹ்யோக்' என்று மாற்றியுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி மொழி திணிப்பில் ஈடுபடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என, எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை பின்பற்றுவதால் தேச ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது மத்தியில் ஆளும் பாஜகவின் கருத்தாக உள்ளது.

மொழி சர்ச்சைகள்
ஆனால், மத்திய அரசின் இந்த போக்கு, ஒற்றுமையை குலைக்கத்தான் பயன்படும் என்பது எதிர்க்கட்சியினர் விமர்சனமாக உள்ளது. சமீப காலமாக இத்தகைய சர்ச்சைகள் அடிக்கடி எழுந்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு தனது திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் வைத்து பிரபலப்படுத்துவது அரசியல் தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தி மொழியில் சுற்றறிக்கை என அடிக்கடி மொழி சர்ச்சைகள் ஏற்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி ஜிப்மரில் அலுவல் மொழியாக முடிந்தவரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கடந்த மே மாதம் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜிப்மரில் இந்தி திணிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறி தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

தவறான தகவல்
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இது குறித்து விளக்கம் அளித்தார். அதில், "ஜிப்மரில் நிர்வாக ரீதியாக மட்டுமே அந்த சுற்றறிக்கை பகிரப்பட்டது. ஆனால் அதை தவறாக புரிந்துகொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற கருத்து பரவிக் கொண்டிருக்கிறது. ஜிப்மரில் இந்தி திணிப்பு எந்த விதத்திலும் இல்லை" எனக்கூறியிருந்தார்.

உத்தரவை திரும்ப பெற வேண்டும்
இந்த நிலையில், இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மதுரை லோக்சபா தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ''இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை "சஹ்யோக்" என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக தலையிட்டு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications