சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது திமுக அரசு! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை: சட்டம் ஒழுங்கை முறையாக திமுக அரசு பராமரிக்கவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியமைக்காக திமுக அரசுக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக கூறியிருக்கிறார்.

ஓ.பி.எஸ்.பேட்டி
சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை செய்தியாளர்கள் சூழந்துகொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் பேட்டி கொடுக்க விரும்பாத ஓ.பி.எஸ். அங்கிருந்து தனது காரை நோக்கி விறுவிறுவென நடையை கட்டினார். ஆனாலும் பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டியதால், ஒரு நிமிடம் மட்டும் நின்று திமுக அரசு பற்றி பேசி விட்டுச் சென்றார்.

சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டதாகவும் குற்றச்செயல்களை குறைக்க நடவடிக்கை எடுக்காததற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேற்கொண்டு சசிகலா பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலளிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழல் உருவாகும் என்பதால் வேகமாக அங்கிருந்து புறப்படுவதில் மட்டுமே குறியாக இருந்தார் ஓ.பி.எஸ்.

ஆறுமுகசாமி ஆணையம்
சசிகலா மட்டுமல்லாமல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானது பற்றியும் விசாரணை பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிவிடுவார்களோ என்ற ஐயமும், படபடப்பும் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்ததை காண முடிந்தது. அண்மையில் சசிகலா மீது தனிப்பட்ட ரீதியில் மரியாதை வைத்திருப்பதாக ஓ.பி.எஸ். அளித்த பேட்டி அவருக்கு கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் சிறிது நாட்களுக்கு பேட்டிகளை அவர் தவிர்க்க முயல்வதாகவும் கூறப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சி
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வம் சட்டம் ஒழுங்கு பற்றி குற்றஞ்சாட்டியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஓ.பி.எஸ். புகாருக்கு தமிழக அரசுத் தரப்பில் மூத்த அமைச்சர்கள் யாரேனும் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications