மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்: சிவசேனா- என்சிபி கூட்டணிக்கு குட்பை சொல்லும் காங்கிரஸ்?
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவேனா, பாஜக இணைந்து புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ளுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் பதவி ஏற்றார். அம்மாநில துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.

இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே அரசுக்கான முதல் அக்னி பரீட்சையாக சட்டசபை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிவசேனா வேட்பாளருக்கு 107 வாக்குகள்தான் கிடைத்தன.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நேற்று நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி பெற்றது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்க்கட்சியான காங்கிரஸில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் சவாண் உட்பட 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிரான வாக்குகள் எண்ணிக்கை 99 ஆக குறைந்தது.
இந்த 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், டிராபிக் காரணமாக சட்டசபைக்கு தாமதமாக வந்தோம் என கூறியுள்ளதுதான் பெரும் நகைச்சுவையாக உள்ளது. இது தொடர்பாக மும்பை மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், சிவசேனா- என்சிபியுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ள வேண்டும் என்கிற குமுறல் காங்கிரஸில் இருந்து வருகிறது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடனும் தொடர்பில் இருக்கின்றனர். இந்த குமுறல்கள், கட்சி தாவல்கள் எல்லாமும்தான் 11 எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காததன் காரணம் என்கின்றனர்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications