அபிலாஷா பராக்! இந்திய ராணுவ முதல் பெண் போர் விமானியாக தேர்வு... சென்னையில் பயிற்சி பெற்று சாதனை
மும்பை: சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அபிலாஷா பராக், இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானியாக நேற்று பொறுப்பேற்றார்.
மராட்டிய மாநிலம் நாசிக்கில் போர் விமானிகள் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் 36 பேர் பயிற்சி முடித்தனர்.
இவர்களுக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏகேசூரி வழங்கினார்.

முதல் பெண் போர் விமானி
பயிற்சி முடித்து பதக்கம் பெற்ற நபர்களில் ஒரு பெண் அதிகாரியும் அடங்குவார். அவர் பெயர் கேப்டன் அபிலாஷா பராக். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெயரை கேப்டன் அபிலாஷா பராக் பெற்றுள்ளார். சிறுவயது முதலே ராணுவ பணியில் விருப்பம் கொண்ட நிலையில் அவர் தனது கனவை நனவாக்கி உள்ளார்.

ராணுவ குடும்பம்
அபிலாஷா பராக் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை பெயர் ஓம்சிங். இவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார். தந்தை ராணுவத்தில் சேவை செய்த நிலையில் ராணுவ பணி மீதான ஆசை அபிலாஷா பராக்கிற்கு ஏற்பட்டது. இந்த ஆசை தற்போது நிறைவேறி தந்தை வழியில் மகளான அபிலாஷா பராக்கும் ராணுவ சேவையில் இணைந்துள்ளார்.

பெண்களாலும் சாதிக்க முடியும்
இதுபற்றி அபிலாஷா பராக் கூறுகையில், ‛‛"ராணுவ குடும்பத்தில் வளர்ந்ததால் அந்த சீருடை மீது எனக்கு நாட்டம் இருந்தது. ராணுவத்தில் இருந்து 2011ல் என் தந்தை ஓய்வு பெற்றார். இதை வித்தியாசமாக உணர்ந்தேன். 2013ல் ராணுவ பயிற்சி மையத்தில் எனது அண்ணன் பயிற்சி முடித்தார். அந்த அணிவகுப்பை பார்த்தபோது ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற உணர்வு இன்னும் அதிகரித்தது. 2018 ல் சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பிறகு ராணுவ விமானப்படையை தேர்வு செய்தேன். ராணுவ விமானப்படையில் பெண்களால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மேலும் இந்திய ராணுவம் பெண்களை போர் விமானிகளாக சேர்க்க தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தே நான் இதை செய்தேன். தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளேன்'' என்றார்.

சென்னையில் பயிற்சி
இவர் சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 2016ல் டெல்லியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி டெக் பட்டப்படிப்பை முடித்தார். 2018ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் இணைந்தார். கார்ப்ஸ் ஆப் ஆர்மி ஏர் டிபென்ஸில் கன்டிஜென்ட் கமாண்டராக தேர்வானார். ராணுவ வான்விமானப்படை இளம் அதிகாரிக்கான ஏர் டிராபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் படிப்பில் 75.70 சதவீதத்துடன் 'ஏ' கிரேட் பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications