கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 ஆண்டுகள் குறைகிறது சராசரி ஆயுட் காலம்!
மும்பை: இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பிறப்பு அடிப்படையிலான உத்தேச ஆயுட் காலத்தில் இரு ஆண்டுகள் குறைந்துவிடுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐஐபிஎஸ் எனப்படும் மக்கள்தொகை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் சூர்யகாந்த் இந்தியர்களின் ஆயுட்காலம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தை பிறப்பு மற்றும் மக்களின் இறப்பு விகிதம் நிலையாக இருப்பதை வைத்து பிறந்த குழந்தையின் சராசரி ஆயுட்காலம் கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் வழக்கத்தை காட்டிலும் 35 முதல் 79 வயதுக்குள்பட்டோர் வரை அதிகளவில் இறந்துள்ளனர்.
இதனால் பிறப்பு, இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் 2020ஆம் ஆண்டு ஆண்களின் உத்தேச ஆயுட்காலமாக 72 ஆண்டுகள் என்று இருந்தது. ஆனால் தற்போது 69.5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. அது போல் பெண்களுக்கு 69.8 ஆண்டுகளில் இருந்து 67 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கூறுகையில் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவிய போது மக்களின் உத்தேச ஆயுட் காலம் குறைந்தது. எய்ட்ஸை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் உத்தேச ஆயுட்காலம் என்பது அதிகரித்துள்ளது என்றார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 4.5 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். ஆனால் தரவு நிபுணர்களோ இந்தியாவில் கொரோனாவால் 10 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கூறுகிறார்கள். ஆயுட் காலம் குறித்து இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, வேல்ஸில் ஓராண்டுக்கு மேல் குறைந்துள்ளது. அது போல் ஸ்பெயினில் 2.28 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
தற்போது இந்தியாவில் மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் என்பது 2010 ஆம் ஆண்டு இருந்ததை போன்றே இருக்கிறது. இதை அதிகரிக்க இன்னும் சில காலம் பிடிக்கும் என தெரிகிறது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கொரோனா பாதிப்பை கணக்கில் கொள்ளும் போது சராசரி ஆயுட் காலம் இரு ஆண்டுகள் குறைகிறது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என பெயர் வெளியிட விரும்பாத ஒரு நிபுணர் தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications