மசூதிகளில் தடை? மைக்ல பெட்ரோல் விலைய பேசுங்க! பாஜக, சித்தப்பாவுக்கு பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே!
மும்பை : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குப் பதிலாக, பணவீக்கம் அதிகரிப்பதைப் பற்றிப் பேச வேண்டும் என கூறியுள்ளார்.
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே கூறியதில் இருந்து மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மே 3 ஆம் தேதிக்குள் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் எம்என்எஸ் தொண்டர்கள் மசூதிகளுக்கு வெளியே ஸ்பீக்கர்களை நிறுவி ஹனுமான் சாலிசாவை பாடுவார்க்ள் என்றும் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

ராஜ் தாக்கரே எச்சரிக்கை
ராஜ் தாக்கரே இந்த பிரச்சினையை ஒரு சமூகப் பிரச்சினை என்று குறிப்பிட்டதோடு, இந்த விஷயத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார், அதே நேரத்தில் "நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்" என்று சிவசேனா அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார். "மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3ஆம் தேதிக்குள் மூட வேண்டும், இல்லையெனில் ஹனுமான் சாலிசாவை ஸ்பீக்கர்களில் இசைப்போம்.

இது சமூகப் பிரச்சினை
இது சமூகப் பிரச்சினை, மதப் பிரச்சினை அல்ல. மாநில அரசிடம் நான் சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயத்தில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள்," என்றும் அவர் பேசினார். மேலும், மும்பையில் உள்ள முஸ்லீம் பகுதிகளில் உள்ள மசூதிகளில் சோதனை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்தார், மேலும் அங்கு வசிக்கும் மக்கள் "பாகிஸ்தான் ஆதரவாளர்கள்" என்றும் கூறினார்.

மதராசா ஒலிப்பெருக்கி
"முஸ்லீம் குடிசைகளில் உள்ள மதராசாக்களை ரெய்டு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த குடிசைகளில் வசிக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது மும்பை போலீசாருக்கு தெரியும்... எங்கள் எம்எல்ஏக்கள் அவர்களை வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார்கள், அத்தகையவர்களுக்கு ஆதார் அட்டை கூட இல்லை. , ஆனால் எம்எல்ஏக்கள் அவற்றை உருவாக்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

ஆதித்யா தாக்கரே பதிலடி
இந்நிலையில் ராஜ் தாக்கரேவுக்கு அவரது உறவினரும் மகாராஷ்டிர அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். ராஜ் தாக்கரேவின் எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், "பரவாயில்லை, ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்குப் பதிலாக, பணவீக்கம் அதிகரிப்பதைப் பற்றிப் பேச வேண்டும். பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலைகளைப் பற்றிப் பேச வேண்டும். மேலும் 60ஐத் திரும்பிப் பார்க்காமல் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசுவோம்." என பதிலடி கொடுத்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications