இந்திய கடற்படையின் முக்கிய ரகசியம் கசிவு.. ஒரு கமாண்டர்.. ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிரடியாக கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை : கடற்கடை கமாண்டர், இரண்டு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டின் முக்கிய ரகசியங்களை கசியவிட்டதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளனவா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய கடற்படை உலகின் சக்தி வாய்ந்த கடற்படைகளில் ஒன்று. இந்தியா மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டிருப்பதால், எல்லையை பாதுகாப்பதில் கடற்படையின் பங்கு மிகப்பெரியது.

இதற்காக இந்தியா அதி நவீன ரக கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை வாங்கி குவித்து உள்ளது. பல கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி உள்ளது. அமெரிக்காவிடம் சில கப்பல்களை வாங்கி உள்ளது.

ரஷ்யா கப்பல்

ரஷ்யா கப்பல்

ரஷ்ய கடற்படைக்காக ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட Kilo class நீர்மூழ்கிக் கப்பல்கள், உலகின் மிகவும் பொதுவான வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும், மேலும் அவை தற்போது பல நாடுகளின் கடற்படைகளில் சேவையில் உள்ளன.

நவீன மயம்

நவீன மயம்

இந்தியாவில், இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சிந்துகோஷ் வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்றுவரை, அரசாங்கம் அத்தகைய 10 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியிருக்கிறது. இவை அனைத்தும் மிக அற்புதமான நவீனமயமாக்கலுக்கு உட்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையிடம் தற்போது 15 வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

3 பேர் கைது

3 பேர் கைது


இந்நிலையில் கடற்படையின் கிலோ க்ளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துவது குறித்த ரகசிய தகவல்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பணியில் இருக்கும் கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு அதிகாரிகள் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெளிவான தகவல் இல்லை

தெளிவான தகவல் இல்லை

இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்த தகவல் கசிவின் பின்னணியில் ஈடுபட்டுள்ளதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

யார் அவர்

யார் அவர்

இந்த விவகாரம் குறித்து கடற்படையின் வைஸ் அட்மிரல் மற்றும் ரியர் அட்மிரல் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வருவதாக கடற்படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பையைச் சேர்ந்த பணிபுரியும் அதிகாரி கமாண்டர் அந்தஸ்தில் ஆன பதவியில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+