மதத்தை சொல்லி ஹிஜாப்பை தடுக்கிறீர்கள், ஓகே.. முதல்வர் யோகி காவி அணிவது சரியா? காங். எம்.பி. கேள்வி
மும்பை: ‛‛ஹிஜாப் பிரச்சனை உள்ள நிலையில் முழுநேரம் காவி உடை அணியும் முதல்வரை எப்படி பொறுத்து கொள்ள முடியும்'' என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி மஜித் மேமன் விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பியில் துவங்கிய இந்த போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது. ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் எதிர்தரப்பினர் காவிஷால் அணிந்து கல்லூரிகளுக்கு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

நீதிபதிகள்
கல்லூரிகளில் ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கிறது.

ஹிஜாப் இடைக்கால தடை
இந்த வழக்கின் கடந்த வார விசாரணையின்போது, ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். சிலர் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து வீடுகளுக்கு செல்கின்றனர். துமகூரு தனியார் கல்லூரி விரிவுரையாளர் சாந்தினி என்பவரும் தனது பணியை ராஜினாமா செய்தனர்.

எப்படி பொறுக்க முடியும்
இந்நிலையில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியான மஜித் மேமன் டுவிட்டரில் உத்தர பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார். அதாவது யோகி ஆதித்யநாத் உடை, ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மஜித் மேமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‛‛மதசார்பற்ற இந்தியாவில் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மதத்தை அடையாளப்படுத்தும் காவி உடையை முழுநேரம் அணிந்திருப்பதை எப்படி ஒருவரால் பொறுத்து கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதரவும், எதிர்ப்பும்
இந்த டுவிட்டர் பதிவில் அவர் யோகி ஆதித்யநாத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. மாறாக இந்தியாவில் காவி உடை அணியும் ஒரு முதல்வர் எனில் அது யோகி ஆதித்யநாத் மட்டுமே. இதன்மூலம் யோகி ஆதித்யநாத்தை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். மஜித் மேமனின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications