காங்-என்சிபி கூட்டணிக்கு எதிர்ப்பு- சிவசேனா இளைஞரணி நிர்வாகி ராஜினாமா!
மும்பை: காங்கிரஸ்- என்சிபி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் ரமேஷ் சோலங்கி விலகினார்.
மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்பது பால்தாக்கரேவின் கனவாகும். இதை நனவாக்க அவரது மகனும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே போராடி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் சிவசேனா. முதல்வர் பதவியில் சுழற்சி முறைக்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் என்சிபி பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் அக்கட்சி தனித்து விடப்பட்டது.

இளைஞரணி நிர்வாகி
இதையடுத்து காங்கிரஸ்- என்சிபி கூட்டணியுடன் இணைந்தது சிவசேனா. முதல்வராக நாளை உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இந்த நிலையில் என்சிபி- காங்கிரஸ் கூட்டணியை அக்கட்சியின் மூத்த தலைவரும் இளைஞரணி நிர்வாகியுமான ரமேஷ் சோலங்கி விரும்பவில்லை.

பொறுப்பு
இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு சிவசேனாவில் இருந்த ரமேஷ் சோலங்கி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது என்னுடைய ராஜினாமா கடிதம். நான் சிவசேனா கட்சியின் இளைஞரணி நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.

கடினமான முடிவு
மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை கொடுத்த உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரேவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிவசேனாவிலிருந்து விலகுவதால் என்னுடைய வாழ்வில் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
|
தலைவர்
சிவசேனா கட்சியினர் அனைவரும் எனது உடன்பிறந்தவர்கள். இந்த பந்தம்தான் என்னை 21 ஆண்டுகள் இக்கட்சியில் பயணிக்க வைத்தது. பால் தாக்கரேவின் நினைவுகள் எப்போதும் என் மனதில் இருக்கும் என தெரிவித்தார். உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கான விழா தடபுடலாக நடந்து வரும் நிலையில் அக்கட்சியிலிருந்து முதல் முறையாக விலகும் தலைவராகிவிட்டார் சோலங்கி.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications