பொறுமையான மனுசனே பொங்கி எழுந்துட்டாரே! அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி! கடுகடுத்த கம்யூ. எம்.பி.செல்வராஜ்
நாகை: எப்போதுமே பார்ப்பதற்கு பொறுமையானவராக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ், அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ரவி பற்றி பேசும் போது மட்டும் பொங்கி எழுந்திருக்கிறார்.
அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி என்றும் தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆளுநர் தமிழக மக்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் ஆவேசம் காட்டியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

கருணாநிதி பிறந்தநாள்
மறைந்த கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பெரியளவில் கொண்டாடப்பட்டது. கூட்டணிக் கட்சி எம்.பி. என்ற முறையில் நாகை நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்வராஜ் அதில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மேடையில் கேட்டதன் விளைவாக ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உடனடியாக கிடைத்ததாக கூறினார்.

இடைநிற்றல்
மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, ''மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழக மானவர்கள் மட்டுமின்றி பொதுவாகவே கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் எதிரானது. புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், தொடர்ந்து மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படும். மாணவர்கள் கல்வியை தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படும்.''

கத்துக்குட்டி
''தேசிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் சரியாக படிக்கவில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழக மக்களின் நலனையும், உரிமைகளையும் மிக கண்ணியத்துடன் எடுத்துக்கூறிய தமிழக முதல்வரை பாஜக தலைவர் அண்ணாமலை கத்துக்குட்டி தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.'

நிறுத்திக் கொள்க
''தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 14 ஆயிரத்து 164 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டதால் தான், 9 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதுபோன்று தமிழக மக்களுக்கு எதிரான கருத்துக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் நிறுத்தி கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications