''வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்கேன்''.. ஆட்டோலதான் வருவேன்''.. போலீசாரை உறைய வைத்த பிச்சைக்காரர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்தனர்.
தமிழகத்தில் கொடிய வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 வாரங்களாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்தது.
அத்தியாவசிய கடைகள் கூட அடைக்கப்பட்டு இருந்தன. ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பார்சல்கள் வழங்கப்பட்டன.

ஆதரவற்றவர்களுக்கு உணவு
தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்கள் ஒரு வேளை உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தனர். தன்னார்வலர்கள் போலீசாரிடம் அனுமதி வாங்கி பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு கொடுத்து உதவி புரிந்தனர். போலீசாரும் பல பகுதிகளில் ஆதரவற்றவர்கள், பிச்சைக்காரர்களுக்கு உதவி புரிந்ததை பார்க்க முடிந்தது.

மீட்ட போலீசார்
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி பகுதியில் இதுபோல் சாலையோரங்களில் வசிப்பவர்களை மாநகராட்சிஅதிகாரிகளும், போலீசாரும் மீட்டு அவர்களை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் தங்கி இருந்த பிச்சைக்காரர்களை போலீசார் மீட்டனர்.

தூக்கிவாரி போட்ட பதில்
அவர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒரு பிச்சைக்காரரிடம் உங்களுக்கு எந்த ஊரு? என்று போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர் அளித்த பதில் போலீசாரை தூக்கி வாரி போட்டது. அந்த நபர் '' சார் எனக்கு கருங்கல் தான். அங்கே தான் தங்கி இருக்கிறேன். தினமும் ஆட்டோவில் வந்து வந்து பிச்சை எடுத்து செல்வேன்.

புலம்பிய போலீசார்
கருங்கலில் ஒரு புது வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறேன்' என்று கூலாக பதில் அளித்தார் அவர். இதனை தொடர்ந்து அங்கு இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தங்க வைத்தனர். ''நாம இத்தனை வருஷம் சர்வீசில் இருந்தும் இன்னும் ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியவில்லை. இங்க பாருயா வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்காங்க'' என்று சில போலீசார் புலம்பியபடி சென்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications