தங்கமணியும், வேலுமணியும் வச்சு விளையாடும் பொம்மை தான் எடப்பாடி பழனிசாமி.. புகழேந்தி அட்டாக்!
நாமக்கல் : நான்கு ஆண்டுகால எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தங்கமணியும், வேலுமணியும் தான் முதல்வர்களாகச் செயல்பட்டனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் அணியின் அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் எம்.பி.ஜெயமுருகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்திப் பேசிய அவர் நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியை கடுமையாகத் தாக்கினார்.

பொம்மையாக பயன்பட்டார் எடப்பாடி
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புகழேந்தி, "முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் விளையாடுவதற்காக ஒரு பொம்மையாக பயன்படுத்தப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லை. நான்கு ஆண்டுகளும் முதலமைச்சராக செயல்பட்டவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கும் உடன் நின்றவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான்.

இதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமாம்
ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை கொடுக்கக் கூடாது என இருக்கும் விதியை மீறி அப்படி செய்தால் என்ன என்று கேட்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். ரூ.4,800 கோடி ஊழல் சிபிஐ விசாரணை வேண்டாமாம். ஆனால் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமாம்.

ஊழல் உச்சம்
கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. துவரம் பருப்பில் கிலோ ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் கமிஷன், ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் டன்னுக்கு கமிஷன். அப்படியெனில் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். சர்க்கரையில் கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு, 37 ரூபாய் சக்கரையை 47 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
Recommended Video

தங்கமணி, வேலுமணி ஊழல்
நிலக்கரி மற்றும் டாஸ்மாக்கில் தங்கமணி ஹீரோ போல ஊழல் செய்துள்ளார். கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறந்து வைத்து கொள்ளையடித்தவர் தங்கமணி. டாஸ்மாக் ஊழல் வெளிவரும். 12 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலே நடத்தாமல் ஊழல் செய்தவர் வேலுமணி. கொசு மருந்திலிருந்து மெட்ரோ வரைக்கும் அனைத்திலும் ஊழல் செய்தவர் வேலுமணி. செவிலியர்களுக்கான பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் பெற்றவர் விஜயபாஸ்கர். இவர்களை வைத்துக்கொண்டு ஜெயிலில் உட்கார்ந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் புகழேந்தி.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications