"இப்படி நடந்ததே இல்லை".. ஆர்க்டிக் பகுதியில் அடுத்தடுத்து மின்னல்.. குழம்பிய விஞ்ஞானிகள்.. என்னாச்சு
நியூயார்க்: சர்வதேச அளவில் மிக மிக அரிதாக நடக்க கூடிய ஒரு இயற்கை நிகழ்வு கடந்த சில காலமாக அதிகமாக நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் வல்லுனர்களை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
காலநிலை மாற்றம் குறித்து உலகம் முழுக்க அச்சம் எழுந்துள்ளது. பல்வேறு நாடுகளில் வெள்ளம், கடுமையான மழை, துருவ பகுதிகளில் ஐஸ் உருகி கடல் மட்டம் உயர்வது, மின்னல் தாக்கி வடமாநிலங்களில் மக்கள் உயிர் இழப்பது என்று காலநிலை மாற்றம் காரணமாக அடுத்தடுத்து துர்சம்பவங்கள் நடக்க தொடங்கிவிட்டன.
கொரோனா வைரஸ் வெளிப்படையாக மக்களை தாக்கி வரும் நிலையில் காலநிலை மாற்றம் சத்தமே இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே ஆர்க்டிக் பகுதியில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆர்க்டிக்
ஆர்க்டிக் பகுதியில் சைபீரியாவில் இருந்து வடக்கு அலாஸ்கா வரை கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தானே? இதில் என்ன இருக்கிறது? நம்ம ஊரில்தான் மழை பெய்யும் போதெல்லாம் மின்னல் தாக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்க்டிக் பகுதியில் மின்னல் தாக்குவது என்பது காலநிலை மாற்றத்தின் ஆபத்தான அறிகுறி என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடந்தது
ஆர்க்டிக் போன்ற பனி பகுதிகளில் மின்னல், இடி ஏற்படாது. இதற்கு காரணம் ஆர்க்டிக் பகுதியில் தண்ணீர் கீழே இருக்கும். இதை முழுக்க முழுக்க பனி மூடி இருக்கும். இதனால் மேல்மட்டத்தில் போதிய வெப்பநிலை இருக்காது. குறைவான வெப்பநிலை காரணமாக மின்னல் சுத்தமாக ஏற்படாது. ஆர்க்டிக் பகுதியில் மின்னல் ஏற்படுவது என்பது மிக மிக அரிதான சூழலியல் நிகழ்வு.

மின்னல் ஏற்பட்டது
இந்த நிலையில்தான் சைபீரியா தொடங்கி வடக்கு அலாஸ்க்கா வரை பல ஆர்க்டிக் பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மின்னல் ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் பனிப்பகுதிகள் உருகி தண்ணீர் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. இதனால் அங்கு லேசாக வெப்பநிலை உயர்ந்து, தண்ணீரின் ஆவியை மேலே அனுப்பி உள்ளது. இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக அங்கு மின்னல்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொல்கிறார்கள்
இது தொடர்பாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், இதுபோன்ற ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததே இல்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. 10 வருடத்தில் ஒரு முறை மின்னல் அடிப்பதே அரிது. ஆனால் இப்போது அடிக்கடி இப்படி நடக்கிறது. அதிலும் கடந்த 3 நாளில் தினமும் மின்னல் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காலநிலை
காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயர்ந்துவிட்டது. இதனால் பனி உருகிவிட்டது. இதனால் மின்னல் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தின் வார்னிங் சிக்னல் இது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ல் இருந்தே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இப்போது மிக வேகமாக தினமும் மின்னல் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

வெப்பம்
வெப்பத்தால் ஐஸ் உருகுவதே இதற்கு காரணம். இது ஒரு பக்கம் கடல் மட்டத்தை உயர்த்தும். இன்னொரு பக்கம் மின்னல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் கூட காட்டுத்தீ ஏற்படும். இது மேலும் வெப்பத்தை உயர்த்தி ஐஸ் வேகமாக உருகுவதை ஊக்குவிக்கும். நொடியில் எல்லாம் மாறிப்போகும் ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஏற்கனவே ரஷ்யாவில் போரேல் சைபீரியா அருகே இப்படி அதிகமாக மின்னல் ஏற்படுகிறது.

மின்னல்
இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. சைபீரியாவில் மின்னல் காரணமாக ஐஸ் நிரம்பி இருந்த பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு 2 மில்லியன் ஏக்கர் நாசமாகி உள்ளது. தொடர்ந்து மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் இது போன்ற தீ அதிகம் ஏற்படும். இது வெப்பநிலையை மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது என்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications