பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையாக இருக்கக் கூடாது.. UNSC இல் ஜெய்சங்கர் பேச்சு
நியூயார்க்: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பயங்கரவாதத்தின் தீமை உலகை அச்சுறுத்துகிறது. பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவதம், கெட்ட பயங்கரவாதம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையவே கிடையாது என்ற திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை ஆயுதங்கள் மூலம் கைப்பற்றிய நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு இது பற்றி விவாதித்தது.
அப்போது இந்தியா சார்பில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அடுத்த மாதம், நியூயார்க்கில் நடந்த கொடூரமான 9/11 சோகத்திற்கு 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில், பயங்கரவாதம் காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் எங்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது.

புல்வாமா குண்டுவெடிப்பு
2016 பதான்கோட் விமானப்படைத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமாவில் எங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தற்கொலைக் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் ஆறாத வடுவாக உள்ளது. பயங்கரவாதத்தின் கொடுமையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நாம் ஒற்றுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்

அச்சுறுத்தல்
பயங்கரவாதத்துடன் நாம் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதத்துடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது ... ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு ஆற்றல் மிக்கதாக மாறிவிட்டது மற்றும் தொடர்ந்து அதன் தடம் விரிவாக்க முயல்கிறது.

பயங்கரவாதம்
ஆப்கானிஸ்தானில் நிகழும் நிகழ்வுகள் இயற்கையாகவே பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கான தாக்கங்களை பற்றிய உலகளாவிய கவலைகளை அதிகரித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் . இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் உள்ள உந்துதல்களைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் விதிவிலக்கு அல்லது நியாயம் கற்பிக்க கூடாது . பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதத்துடனும், தேசியத்துடனும், நாகரிகத்துடனும் அல்லது இனக்குழுவுடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.

ஜெய்சங்கர் கவலை
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட, பாதுகாப்பு, நிதி மற்றும் பிற கட்டமைப்புகளை கடுமையாக்கி வைத்த போதிலும், பயங்கரவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கவும், வளப்படுத்தவும் மற்றும் செயல்படுத்தவும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்" இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications