ஒரு காலத்தில் 144 ஆண்டுகள் காத்திருப்பு... ஆனால் இப்போது ஒரு நொடி போதும்... அசத்தும் ஜேம்ஸ் வெப்
நியூயார்க்: சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமான நெப்டியூனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தெளிவாக படம் எடுத்திருக்கிறது. இந்த படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறக்கு நெப்டியூன் கிரகம் அதன் வளையங்களுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 1989ல் வாயேஜர் 2 விண்கலம் நெப்டியூனை வளையங்களுடன் படம் பிடித்திருந்தது.
நெப்டியூன் கிரகம் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் என்பதால் அதனை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால் தற்போது அதன் மெல்லிய வளையங்களையே 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி படம் பிடித்திருப்பது இந்த தொலைநோக்கியின் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

வெப் தொலைநோக்கி
விண்வெளி ஆய்வுக்காக சுமார் ரூ.79,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தின் கடந்த காலத்தை பற்றி அறிந்துகொள்ள விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது அவ்வப்போது, சில கிரகங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது நெப்டியூன் கிரகத்தின் புகைப்படங்களை வெப் தொலைநோக்கி மிக பிரமாதமாக எடுத்து அனுப்பி இருக்கிறது.

144 ஆண்டுகள்
1846ல் இந்த நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கிரகம் குறித்த தகவல்களை முழுவதுமாக பெற 144 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது. இதன் பின்னர் 1989 இல் வாயேஜர் 2 விண்கலம் போகும் வழியில் சுமார் 4,000 கி.மீ தொலைவில் நெப்டியூனை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதுதான் நெப்டியூனின் மிகச்சிறந்த படமாக இருந்தது. ஏனெனில் இந்த படத்தில் நெப்டியூனின் வளையங்கள் நன்றாக தெரிந்தன.

சுற்றிவர 164 ஆண்டுகள்
இதனையடுத்து ஹப்புள் தொலைநோக்கி சில படங்களை எடுத்தது. ஆனால் இவ்வாறு தெளிவான படங்களை எடுப்பது சாதாரண விஷயமல்ல. ஏனெனில், பூமி சூரியனை சுற்றி வர 1 வருடம் ஆகிறது எனில் நெப்டியூன் சூரியனை சுற்றிவர 164 ஆண்டுகள் ஆகும். அதாவது சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கி.மீ. எனவே இந்த கோள் குறித்த தகவலை அவ்வளவு எளிதில் திரட்ட முடியாது. ஆனால் வெப் தொலைநோக்கி இதனை சாதித்து காட்டியுள்ளது.

நீல நிறம்
நீல நிறத்தில் இருக்கும் இந்த கோள் பூமியை போலவே 17 மடங்கு எடையை கொண்டுள்ளது. இக்கோளின் வாயு மண்டலம் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால்தான் இது நீல நிறத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இக்கோளுக்கு 2 துணைக்கோள்கள் மட்டுமே இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது இதற்கு 14 துணை கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 துணைக்கோள்களை வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.
இந்த கோளை குறித்து அறிந்துகொள்ள ஒரு காலத்தில் 144 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், தற்போது இக்கோளின் மெல்லிய வளையங்களையும் சேர்த்து வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications