5 மணி நேரம்.. சேலத்து புள்ளியை கோர்த்துவிட்ட மருது.. டக்கென திரும்பிய பார்வை - எடப்பாடிக்கு சிக்கல்?
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இன்று தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான மருது அழகுராஜ், சேலம் இளங்கோவனை விசாரிக்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரான சேலம் இளங்கோவன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மருது அழகுராஜிடம் இன்று சுமார் 5 மணி நேரம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான தகவல்கள் தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கோடநாடு மர்மம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மர்ம கும்பல் நுழைந்து, கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூரை கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் சசிகலா, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகியும் மர வியாபாரியுமான சஜீவன், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மருது அழகுராஜ்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை சந்தித்து உண்மைச் சம்பவங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக பேரம் பேசியதாக வெளியான தகவல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், ஜெயலலிதாவின் உரையாசிரியருமான மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆஜராக உத்தரவு
இந்நிலையில், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளேட்டின் ஆசிரியராக இருந்தவருமான மருது அழகுராஜுக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். தனிப்படை போலீசாரின் அழைப்பை ஏற்று இன்று ஆஜராகப்போவதாக மருது அழகுராஜ் தெரிவித்த நிலையில், இன்று நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

5 மணி நேரம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மருது அழகுராஜிடம் 5 மணி நேரமாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவனையும் தனிப்படை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோடநாடு மர்மம் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டவர்களையும் தனிப்படை போலீசார் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மருது அழகுராஜ் பேட்டி
மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு பேட்டியளித்த அவர், "கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவனையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அனுப்பிய நோட்டீஸை ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சேலம் இளங்கோவன்
கோடநாடு பங்களாவில் எடுக்கப்பட்ட சில முக்கிய ஆவணங்களை சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமாக சேலம் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஒருவரிடம் கனகராஜ் ஒப்படைத்திருக்கிறார். அதன் பின்னரே கனகராஜ் கார் விபத்தில் மரணமடைந்தார் என ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருது அழகுராஜ் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் விரைவில் சேலம் இளங்கோவன் விசாரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

எடப்பாடிக்கு சிக்கல்
எடப்பாடி பழனிசாயின் நிழலாக வலம் வருபவர் சேலம் இளங்கோவன். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் ஓபிஎஸ்ஸூக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டால் அது அவருக்குப் பின்னடைவாகும் என்பதால் சேலம் இளங்கோவன் மீதான விசாரணை பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!











Click it and Unblock the Notifications