தேர்தல் பணியின்போது பெண் காவலரிடம் சில்மிஷம்.. துணை தாசில்தாரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பணியின் போது பெண் போலீஸிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை வட்டாட்சியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் சோதனை
இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டத்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் போலீசிடம் சில்மிஷம்
இந்த நிலையில் உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் பறக்கும் படை குழுவினர், ரோந்து பணியில் இருந்தபோது பெண் காவலர் ஒருவரிடம் துணை வட்டாட்சியர் பாபு என்பவர் சில்மிஷம் செய்துள்ளார். இதையடுத்து பெண் காவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் துணை வட்டாட்சியர் பாபுவை பிடித்தனர்.

சிறையில் அடைத்தனர்
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது பெண் காவலரிடம்,வட்டாட்சியர் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் துணை வட்டாட்சியர் பாபுவை கைது செய்து குன்னூர் சிறையில் அவரை அடைத்தனர்.

பெண் போலீசுக்கு விலக்கு வருமா?
தேர்தல் பணியின் போது பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தேர்தல் பணிகளில் பறக்கும் படையினரின் வேலை இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கும். பெண் போலீஸ் இரவு நேரத்தில் இந்த பணிகளில் ஈடுபடுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications