Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பணியின்போது பெண் காவலரிடம் சில்மிஷம்.. துணை தாசில்தாரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பணியின் போது பெண் போலீஸிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை வட்டாட்சியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பறக்கும் படையினர் சோதனை

பறக்கும் படையினர் சோதனை

இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டத்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் போலீசிடம் சில்மிஷம்

பெண் போலீசிடம் சில்மிஷம்

இந்த நிலையில் உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் பறக்கும் படை குழுவினர், ரோந்து பணியில் இருந்தபோது பெண் காவலர் ஒருவரிடம் துணை வட்டாட்சியர் பாபு என்பவர் சில்மிஷம் செய்துள்ளார். இதையடுத்து பெண் காவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் துணை வட்டாட்சியர் பாபுவை பிடித்தனர்.

சிறையில் அடைத்தனர்

சிறையில் அடைத்தனர்

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது பெண் காவலரிடம்,வட்டாட்சியர் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் துணை வட்டாட்சியர் பாபுவை கைது செய்து குன்னூர் சிறையில் அவரை அடைத்தனர்.

பெண் போலீசுக்கு விலக்கு வருமா?

பெண் போலீசுக்கு விலக்கு வருமா?

தேர்தல் பணியின் போது பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தேர்தல் பணிகளில் பறக்கும் படையினரின் வேலை இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கும். பெண் போலீஸ் இரவு நேரத்தில் இந்த பணிகளில் ஈடுபடுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+