கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையில்லை.. இன்ஹேலர் அல்லது மாத்திரை போதும்- ஸ்வீடன் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு
பாரிஸ்: இப்போது, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில், அந்த தடுப்பூசிகள் இன்ஹேலர்கள் அல்லது மாத்திரைகளாக மாறி சப்ளை செய்யப்படக் கூடும்.
தெற்கு ஸ்வீடனின் மிகப்பெரிய அறிவியல் பூங்காக்களில் ஒன்றான மெடிகன் வில்லேஜில் உள்ள ஒரு ஆய்வகத்தில், விஞ்ஞானி இஞ்செமோ ஆண்டர்சன் கையில் ஒரு மெல்லிய, பிளாஸ்டிக் இன்ஹேலரை வைத்திருக்கிறார், இது ஒரு தீப்பெட்டியை விட பாதி அளவுக்குத்தான் உள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்த சிறிய தயாரிப்பு ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்று அவரது குழு நம்புகிறது.

மலிவான மருந்து
"இது எளிதானது மற்றும் உற்பத்தி செய்வது மிகவும் மலிவானது" என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஹன் வபோர்க் கூறுகிறார். ஆஸ்துமா நோயாளிகளுக்கு இன்ஹேலர்களை உருவாக்கும் இந்த குழு, இப்போது கொரோனாவை தடுக்கும் இன்ஹேலர்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

வெப்ப நிலை பிரச்சினையில்லை
இந்த மருந்து 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கூட தாங்கும். உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்த தற்போதைய பரவலான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை சேமிக்க தேவையான நிபந்தனைகளுடன் ஒப்பிட்டால், இது மிகப்பெரிய மாறுபாடு ஆகும். ஏனெனில் அந்த தடுப்பூசிகள் அவை -70 சி போன்ற வெப்பநிலையில் கண்ணாடி குப்பிகளில் வைக்கப்பட வேண்டும், அல்லது அவை செயல்திறனை இழந்துவிடும்.

வசதி அதிகம்
ஆனால், இவர்கள் தயாரிக்கும் மருந்தை குளிர்பதன வசதி தேவையில்லாமல் மிக எளிதாக விநியோகிக்க முடியும். மேலும் இது சுகாதார பணியாளர்களின் தேவை இல்லாமல் மக்களாகவே பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது முக்கிய அம்சம். கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டில் நோயெதிர்ப்பு பேராசிரியர் ஓலா வின்கிஸ்ட் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இரு வகை உருமாறிய கொரோனா
இந்த நிறுவனம் தற்போது கொரோனா வைரசின் பீட்டா (தென்னாப்பிரிக்க) மற்றும் ஆல்பா (யுகே) வகைகளில் அதன் பவுடர் வடிவிலான இந்த தடுப்பூசிகளை பரிசோதித்து வருகிறது. தடுப்பூசி சப்ளையில் திணறும் ஆப்பிரிக்காவில் இந்த மருந்துகள் பலனளிக்கும். எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று இந்த குழு நம்புகிறது.
Recommended Video

இன்ஹேலர்
வெப்பமான தட்பவெப்பநிலை, மின்சார சப்ளையிலுள்ள பிரச்சினை ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் சவால்களாக உள்ளன. அதற்கு இந்த பவுடர் வடிவிலான தடுப்பு மருந்து மாற்றாக மாறும். இந்த மருந்து இதுவரை, எலிகள் மீது மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஐ.எஸ்.ஆர் மற்றும் ஐகனோவோ அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மனிதர்களிடம் இது பற்றிய ஆய்வுகளைத் தொடங்க போதுமான நிதி திரட்டியுள்ளன. இந்த மருந்து மாத்திரை வடிவிலோ, அல்லது இன்ஹேலர் வடிவிலோ தயாரிக்கப்பட்டு மக்களிடையே வினியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications