பீகாரில் பாஜகவை வெறுப்பேற்றும் நிதிஷ்குமார்.. தேஜஸ்வி ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு!
பாட்னா: பீகாரில் விரைவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பாட்னாவில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்குப் பின்னர் இதனை நிதிஷ்குமார் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. நாடு விடுதலைக்கு முன்னர்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இன்றைய இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஆகையால் தற்போதைய நிலையில் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்பது பல்வேறு தரப்பின் வலியுறுத்தல். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை வலியுறுத்துகின்றன. மத்திய அரசும் கூட இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு பின்னர் கைவிட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

மத்திய அரசு நிலை என்ன?
இந்நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ பிடிவாதமாக இருந்து வருகிறது. பாஜக-ஜேடியூ கூட்டணிக்கு எதிரான ஆர்ஜேடியின் தலைவர் தேஜஸ்வி யாதவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என வலியுறுத்துகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி பீகார் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குழு நேரில் சந்தித்து வலியுறுத்தியது. ஆனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாத்தியமற்றது; குழப்பங்கள் நிறைந்தது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.

அனைத்து கட்சி கூட்டம்
இதனிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று மாநில அரசின் சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, ஆர்ஜேடி உள்ளிட்டவை பங்கேற்றன. இக்கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் முடிவை தெரிவித்தனர்.

விரைவில் பூகம்பம்?
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு எந்த நேரத்திலும் முறியலாம் எனவும் கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டால் ஆர்ஜேடியுடன் கை கோர்க்க நிதிஷ்குமார் தயாராகவே இருக்கிறார். அண்மையில் இப்தார் விருந்தில் தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ் பங்கேற்றார். இப்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்திலும் தேஜஸ்வியுடன் இணைந்து செயல்படுகிறார் நிதிஷ்குமார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் இப்போதைக்கு நிதிஷ்குமாருடன் பாஜக மல்லுக்கட்டாது என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் பீகார் அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications