கோயம்பேடு சந்தையில் இருந்து புதுவை திரும்பிய லாரி ஓட்டுநருக்கு கொரோனா
புதுச்சேரி: கோயம்பேடு சந்தையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பிய லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைகளில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேரும், தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏற்கனவே 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து சென்றவர்களால் தமிழகத்தில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு லாரிகளில் சரக்கு ஏற்றிச் சென்ற புதுச்சேரி லாரி டிரைவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அதில் தற்போது புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளதால் புதுச்சேரி பகுதிக்குள் தமிழக மக்கள் நுழைவதை தடுக்க கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம், திருக்கனூர் ஆகிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்கு வருவோர், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகு புதுச்சேரிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications