மன உளைச்சலா இருக்கு..புலம்பிய புதுச்சேரி ரங்கசாமி! அண்ணன் தங்கை சண்டை தான்! ஆறுதல் சொன்ன தமிழிசை!
புதுச்சேரி : புதுச்சேரியில் ஆட்சி செய்வதில் மன உளைச்சலோடு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறிய நிலையில், இது குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதேபோல அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்காளத்திலும் கூட இதே நிலைமைதான்.
அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர்கள் தலையிடுவதாகவும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பது போல் இருப்பதாகவும் முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டுள்ளதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

புதுச்சேரி
அண்டை மாநிலமான புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து அரசின் அதிகாரத்தில் தலையிடுவதோடு முக்கிய கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பேசிய பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுச்சேரி சட்டசபையில் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சுயேச்சை எம்எல்ஏ நேரு உள்ளிட்ட பல அமைப்புகளில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

ரங்கசாமி புலம்பல்
மனுவை பெற்றுக் கொண்ட பிறகு பேசிய அவர்," மாநில அந்தஸ்து தரக்கோரி மத்திய அரசிடம் பலமுறை கேட்டோம் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் மக்களுக்கான பல விஷயங்களை செய்ய முடியாத நிலை இருக்கிறது இதனால் அதிக மன உளைச்சல் தான் ஏற்படுகிறது இது தொடர்பாக சட்டரீதியாக செய்ய வேண்டியதை செய்வோம் எனக் கூறியிருந்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது.

நாராயணசாமி கண்டனம்
மாநில அந்தஸ்து பெறுவதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக முதல்வர் கூறினார். ஆனால், இப்போது நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை. நினைப்பதை எல்லாம் செய்ய முடியவில்லை என்று புலம்புகிறார். முதல்வரின் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லையா? ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அந்தஸ்து பெறுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாரா? அல்லது ஆதரவுதான் கேட்டாரா? இவர் புலம்புவதற்கு பின்னணி என்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் காங்கிரஸ் நாரயணசாமி.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில் இது குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை ," அரசு ஆள்வதில் அதிகாரிகளால் தனக்கு சிரமம் உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் அதிகாரிகளை அழுத்து பேசி சுமூக தீர்வு காணப்படும். குடும்பத்தில் வரும் அண்ணன், தங்கை சண்டை போன்றதாகவும் இதனால் யாரும் குளிர் காய முடியாது. தனக்கு வரும் கோப்புகள் அனைத்தையும் கோப்பாக பார்க்காமல் மக்களின் முகமாக பார்த்து ஒப்புதல் அளிக்கிறேன்

நல்லது நடக்கும்
மக்களை பாதிக்கும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரத்தில் தான் பதில் கூற விரும்பவில்லை என்றாலும் புதுச்சேரிக்கு நல்லது நடக்கும். யாரும் மன உளைச்சலில் இருக்க கூடாது என்பது தான் தனது கொள்கை. அதிகாரத்தை பயன்படுத்தாமல் அன்பாக மக்களுக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கிறேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்தது தொடர்பாக பதில் அளித்த அவர்," நான் மருத்துவர் என்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு தான் சர்க்கரை கொடுத்து கொல்ல முடியும், ஆனால் இங்கு யாருக்கும் சர்க்கரை வியாதி இல்லை அதனால் சர்க்கரை கொடுக்கலாம்.. அது இனிப்பு தானே" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications