Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவை உலகழகி சான் ரேச்சல் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் புதிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: நிறம் குறித்த விமர்சனங்களைப் புறந்தள்ளி, மாடலிங் துறையில் வெற்றி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த அழகி சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைக் காணலாம்.

புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகள் சங்கரப்பிரியா (எ) சான் ரேச்சல் (25). மாடல் அழகியான இவர், 'மிஸ் புதுச்சேரி 2020', 'மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019', 'குயின் ஆஃப் மெட்ராஸ் 2022' மற்றும் 'மிஸ் ஆஃப்ரோ கோல்டன் இந்தியா 2023' உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்றவர்.

san rachal model puducherry

இவர், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரைக் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி இரவு, சான் ரேச்சல் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தனது தந்தை காந்திக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த காந்தி, உடனடியாக மகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேச்சல், ஜூன் 8-ஆம் தேதி மருத்துவரின் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 13-ஆம் தேதி முதல் சான் ரேச்சலுக்குக் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் திடீரென வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜூன் 20-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தந்தை காந்தி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சான் ரேச்சலுக்குக் குடும்பப் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை ஆகியவை இருந்ததாகத் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

25 வயதான சான் ரேச்சல், சிறு வயதிலேயே புற்றுநோய் காரணமாகத் தாயை இழந்தவர். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தொடக்கத்தில் தனது நிறத்தின் காரணமாகக் கேலிகளைச் சந்தித்தாலும், அதை ஒரு சவாலாக ஏற்று மாடலிங் துறையில் நுழைந்தார். பலருக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகளையும் அவர் எடுத்து வந்தார். 'மிஸ் இந்தியா' பட்டத்தை வெல்வதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். தனது தன்னம்பிக்கை மற்றும் போராட்ட குணத்தால் பலருக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+