புதுவை உலகழகி சான் ரேச்சல் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் புதிய தகவல்!
புதுச்சேரி: நிறம் குறித்த விமர்சனங்களைப் புறந்தள்ளி, மாடலிங் துறையில் வெற்றி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த அழகி சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைக் காணலாம்.
புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகள் சங்கரப்பிரியா (எ) சான் ரேச்சல் (25). மாடல் அழகியான இவர், 'மிஸ் புதுச்சேரி 2020', 'மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019', 'குயின் ஆஃப் மெட்ராஸ் 2022' மற்றும் 'மிஸ் ஆஃப்ரோ கோல்டன் இந்தியா 2023' உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்றவர்.

இவர், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரைக் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி இரவு, சான் ரேச்சல் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தனது தந்தை காந்திக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த காந்தி, உடனடியாக மகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேச்சல், ஜூன் 8-ஆம் தேதி மருத்துவரின் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 13-ஆம் தேதி முதல் சான் ரேச்சலுக்குக் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் திடீரென வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜூன் 20-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தந்தை காந்தி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சான் ரேச்சலுக்குக் குடும்பப் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை ஆகியவை இருந்ததாகத் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதான சான் ரேச்சல், சிறு வயதிலேயே புற்றுநோய் காரணமாகத் தாயை இழந்தவர். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தொடக்கத்தில் தனது நிறத்தின் காரணமாகக் கேலிகளைச் சந்தித்தாலும், அதை ஒரு சவாலாக ஏற்று மாடலிங் துறையில் நுழைந்தார். பலருக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகளையும் அவர் எடுத்து வந்தார். 'மிஸ் இந்தியா' பட்டத்தை வெல்வதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். தனது தன்னம்பிக்கை மற்றும் போராட்ட குணத்தால் பலருக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications