சபாஷ் தமிழிசை.. ஒரே வீடியோ.. மொத்தம் 18 லாரி டிரைவர்கள்.. நள்ளிரவு 1 மணிக்கு அதிரடி.. என்ன நடந்தது?
18 லாரி டிரைவர்களை காஷ்மீர் பனியில் இருந்து தமிழிசை மீட்டுள்ளார்
புதுச்சேரி: 15 நாட்களாக சாப்பாடு இல்லாமல், காஷ்மீர் பனியில் சிக்கி தவித்துள்ளனர் 18 தமிழக லாரி டிரைவர்கள்.. அவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது.
இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவினால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன.

தமிழகம்
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 18 லாரி டிரைவர்கள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பணி நிமித்தமாக சென்றுள்ளனர்.. ஆனால், அங்கு சிக்கி உணவு கூட இல்லாமல் தவித்துள்ளனர்.. கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேலாக இவர்கள் பனியில் மாட்டிக் கொண்டு இன்னலில் உள்ளதாக வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோ தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழிசை
இதையடுத்து, அவர்களை மீட்கும் முயற்சியில் தமிழிசை இறங்கினார்... இதற்காக தெலுங்கானா ஏடிசி துஷார் ஸ்ரீயிடம், தமிழக லாரி டிரைவர்கள் அங்கு சிக்கி இருக்கும் விஷயத்தை சொல்லி, உதவும்படி கேட்டுக் கொண்டார்.. அதன்பேரில் அவரும் ஜம்முவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிரடி
அதிரடியாக நள்ளிரவு ஒரு மணிக்கு பாதுகாப்பு படையினர் லாரி டிரைவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர்.. தமிழகத்தை சேர்ந்த 18 டிரைவர்களையும் மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு வந்தனர்... அவர்களுக்கு சாப்பாடு தந்தனர்.. முகாமிலேயே பிற வசதிகளையும் செய்து தந்து தங்க வைத்துள்ளனர்.. பத்திரமாக மீட்கப்பட்ட 18 பேரும் அங்கு சிரமமின்றி நிம்மதியாக இப்போது இருக்கிறார்கள்.

வீடியோ
இவர்கள் எல்லாம் கடந்த 12-ம் தேதி பாலக்காட்டில் இருந்து காஷ்மீருக்கு கேபிள் ஏற்றி கொண்டு போனவர்களாம்.. சாலைகள் எல்லாம் பனி உறைந்து கிடக்கவும், அவர்களால் அங்கிருந்து நகர முடியாமல் தவித்துள்ளனர்.. கொண்டு போன சாப்பாடும் தீர்ந்துவிட்ட நிலையில் பட்டினியாகவே இருந்துள்ளனர்.

உதவி
அதற்கு பிறகுதான் ஒரு வீடியோ எடுத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த வீடியோ உதவியால்தான் 18 பேரையும் தமிழிசையால் மீட்க முடிந்துள்ளது.. இப்போதைக்கு அங்கு பனி உறைந்து நிலைமை சீராக சில மாதங்கள் ஆகுமாம்..அதுவரை அங்குதான் லாரி டிரைவர்கள் தங்கியிருப்பார்கள் என்று தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications