நாளை தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. திடீரென அறிவித்த கருணாஸ்.. என்னாச்சி?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் திடீரென்று அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும்.
இந்த ஆண்டும் 115வது தேவர் ஜெயந்தி, 60வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை முத்துராமலிங்க தேவர் குருபூஜை
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரை வங்கியில் இருந்த தங்க கவசம் எடுத்து செல்லப்பட்டு முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பசும்பொன்னுக்கு சென்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு
நாளை குருபூஜை நடப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், பிற அமைப்புகளின் நிர்வாகிகள் பசும்பொன்னுக்கு செல்ல உள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவர் குருபூஜை விழாவில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர ட்ரோன் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

கருணாஸ் வெளியிட்ட ஆடியோ
இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ மொத்தம் 1.56 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக கருணாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான ஆடியோவில் கருணாஸ் பேசியதாவது:

விமான நிலையத்துக்கு தேவர் பெயர்
வணக்கம், நான் நடிகர் கருணாஸ். முக்குலத்தோர் புலிப்படை அறக்கட்டளை சார்பாக நாளை நடக்க உள்ள பசும்பொன் முத்துராமலிங் தேவர் குருபூஜை விழாவில் 50 ஆண்டு கால கோரிக்கைகையை வலியுறுத்தி எனது சொந்த இடத்தில் அன்னதானம் வழங்க உள்ளேன். மதுரை விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரை நூற்றாண்டு காலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர் கோரிக்கை
இதுதொடர்பாக நான் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, இதற்கு முன்பு இருந்த முதல் அமைச்சர், தற்போதைய முதல் அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கையாக வலியுறுத்தினேன். சட்டசபையிலும் இதுபற்றி பேசி இருக்கிறேன். இந்நிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்து அரங்கம் அமைத்து இருந்தேன். அதை எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் கமுதி டிஎஸ்பி தன்னிச்சையாக அரங்கை அகற்றி உள்ளார். வருவாய்த்துறை, நிர்வாகிகள் ஆலோசனை இன்றி அகற்றி உள்ளார். இதனை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன்.

சாகும்வரை உண்ணாவிரதம்
மேலும் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நான் பசும்பொன்னில் எனது சொந்த இடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்துள்ளேன்''என்றார். மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை உள்ளது. இருப்பினும் தற்போது வரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கருணாஸ் சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications