இமானுவேல் சேகரன் நினைவு நாள்.. ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த வாலிபரை தாக்கிய மின்சாரம்-அதிர்ச்சி
ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன். ராணுவத்தில் சேவையாற்றிய இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து பல போராட்டங்களை நடத்தினார்.
இவரது 65வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதபோல் பிற தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் இருந்தும் திரளானவர்கள் சென்றனர். இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரயில் நிலையத்தில் சில இளைஞர்கள் கொடிகளை கையில் வைத்து அசைத்து கொண்டிருந்தனர்.

ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த இளைஞர்
அப்போது சிலர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த என்ஜின் மீது ஏறினர். தேவக்கோட்டையை சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் தான் கையில் வைத்திருந்த கொடியை தலைக்கு மேலே தூக்கி வேகமாக அசைத்தார். அப்போது அங்கு சென்ற மின்வயர் மீது கொடி பட்டது. இதனால் உடனடியாக மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதையடுத்து அவரை மற்றவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே அந்த இளைஞரை மின்சாரம் தாக்கும் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

144 தடை உத்தரவு
முன்னதாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பதட்டமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து வரக்கூடாது ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தான் ரயில் என்ஜினில் ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications