ரூ.25 லட்சம் கோடி.. பாலைவனத்தில் வீடுகள்! அடையாளம் தெரியாமல் மாறப்போகும் சவூதி - அறிவியலா? ஆபத்தா?
ரியாத்: சவுதி அரேபியா எப்போதும் புதுமையான கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் இந்நாட்டின் நகரத்தில் கட்டுமானங்களை உருவாக்கி வரும் 'நியோம்' எனும் நிறுவனம் தற்போது மற்று புதிய முற்றிலும் மாறுபட்ட கட்டுமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது சுமார் 170 கி.மீ தொலைவிற்கு மனிதர்களுக்கான கட்டுமானத்தை உருவாக்கவே இந்நிறுவனம் முயன்று வருகிறது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் இருக்கும்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் குரங்கு அம்மை தொற்று உள்ளிட்டவைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இவற்றிற்கு நம்மால் இவற்றை குணப்படுத்த மருந்துகளை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் மனித இனத்திற்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பது என்பது, காற்று மாசுதான். உலக அளவில் இந்த மாசு காரணமாக சுமார் 90 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இதில் இந்தியாதான் முதல் இடம். ஆனால் இது வெறும் காற்று மாசை மட்டும் சார்ந்த செய்தியல்ல. இவ்வாறு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து உமிழப்படும் மாசு புவியின் வெப்பத்தை அதிகரித்து இயற்கை பேரிடர்களை உருவாக்கவும் வழிவகை செய்கிறது. சமீபத்தில் உலக நாடுகள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 2060க்குள் பூமியில் வெளியேற்றப்படும் கார்பன் கழிவுகளின் சதவிகிதத்தை பூஜ்யமாக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பான ஒரு கற்பனை திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பாலைவனம்
சவுதி அரேபியாவில் உள்ள பாலைவன மற்றும் மலைத் தொடர்களுக்கு நடுவே மனிதர்கள் வசிப்பதற்கு குடியிருப்புகளை ஏற்படுத்துவத இந்த கற்பனை திட்டம் சிந்தித்துள்ளது. கேட்பதற்கு சற்று முட்டாள்தனமாக இது இருக்கலாம். ஆனால் யாருக்கு தெரியும் இதுவே கூட எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரலாம். இந்த திட்டத்தின்படி, கண்ணாடியால் மூடப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் 100 மைல்களுக்கு மேல் பாலைவனம் மற்றும் மலை நிலப்பரப்பில் கட்டப்படும். இதில் சுமார் 90 லட்சம் மக்கள் வரை வசிக்க முடியும். யோசித்து பாரக்கவே தலை சுற்றுகிறதா?
Recommended Video

கற்பனைத் திட்டம்
இந்த திட்டதை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திட்டம் என்று அழைப்பதை விட இது ஒரு யோசனை என்றுதான் கூற வேண்டும். இந்த யோசனைக்கான ஒரு கற்பனை கட்டுமான வரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமானதாக இல்லையென்றாலும் அனைவரது கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. சவுதி அரேபியாவின் அகபா வளைகுடாவிற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

குடியிருப்பு
சவுதி அரேபியாவில் கட்டமைப்பு வசதிகளை செய்து வரும் 'நியோம்' எனும் நிறுவனம் இது தொடர்பான வீடியோவை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்தின்படி, 100 மைல்களுக்கு உருவாக்கப்பட இருக்கும் இந்த கட்டங்கள் 500 மீட்டர் உயரம், 200 மீட்டர் அகலமான அமைப்பை கொண்டு இருக்கும். மேலும் இதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிக்க கார்களை பயன்படுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாக கரியமில வாயு உமிழ்வை தவிர்க்க முடியும். ரயில் சேவை மட்டுமே இருக்கும். மேலும் 5 நிமிடங்களில் நம்மால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அந்த வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படும்.

சந்தேகம்
இந்த மாதிரியான கட்டமைப்புகள் பழமையானவற்றிலிருந்து மனிதர்களை பிரித்துவிடும் என சிலர் எச்சரித்துள்ளனர். ஆனால் இதுதான் எதிர்காலமாக இருக்கும் என்று பலர் கூறத் தொடங்கியுள்ளனர். 2030ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள 'நியோமின்' கற்பனை திட்டத்தின் முதல் பகுதிக்கு சுமார் ரூ.25 லட்சம் கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் சார்பில் முதலீடு செய்யப்பட்டால்தான் பணியை விரைந்து முடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக சில செலவினங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த செலவீனங்கள் பெருமளவு கைகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த திட்டத்தின் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து இரு வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கையில், முதல் கட்டம் முடிக்கப்படும் நிலையில்தான் இது வெற்றியா தோல்வியா எனத் தெரியும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications