தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கால் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்.. கொரோனா பரவ வாய்ப்பு
சேலம்: தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Recommended Video
ஞாயிறு முழு ஊரடங்கு, என்று இருந்த நிலையில், நோய் தொற்று பரவும் அபாயத்தால் இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, மளிகைக்கடை, டீக்கடை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்படவும் 12 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என உத்தரவிட்டது. இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த கட்டுப்பாட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்டத்தில், நோய்தொற்று நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டு வருகிறது. நாளொன்றுக்கு 600 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நோய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, பூக்கடை காய்கறி கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கி முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் முக கவசம் இன்றி சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூடும் இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் கூறும்போது, தற்பொழுது அரசானது புதிய கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஆனால், மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏற்கனவே சேலத்தில் நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications