மதுபான பாரில் தகராறு.. இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற ரவுடி.. சேலத்தில் பரபரப்பு!
சேலம்: சேலத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ரவுடி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்(40). தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்த இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் ஆனந்தாபாலம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று இரவு தனது நண்பரான அகமது உசேன் மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இவர்களுக்கு அருகில் மற்றொரு தரப்பினரான மேட்டுத் தெருவைச் சேர்ந்த மோகன் அவரது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் மோகன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாக கிருபாகரனின் நண்பர் ஒருவர் மனைவியுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில் இதுதொடர்பாக மது அருந்திக் கொண்டிருந்த போது இருதரப்பு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில் மோகன், அவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பீர்பாட்டிலை உடைத்து கிருபாகரன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் மோகன் தான் வைத்திருந்த கத்தியால் கிருபாகரனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் கிருபாகரன், சீனிவாசன் மற்றும் தகராற்றை தடுக்க வந்த அம்ஜத் ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.
தகராறு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த டவுன் காவல்நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று கிருபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியான மோகன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியொலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications