மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. சிக்கலில் சேலம் பரிமளா

Subscribe to Oneindia Tamil

சேலம்: பிரதமரை கொலை செய்ய தயார் என சமூக வலைத்தளத்தில், கருத்து வெளியிட்ட பெண்ணை கைது செய்ய பாஜகவினர் சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பரிமளா. இவரைத்தான் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Threaten to PM, BJP filed police complaint against a women in Salem

பிரதமர் மோடியை முடிக்க மனித வெடிகுண்டாக செயல்பட்டு தாக்க தயார் என்றும், அவரால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடையாது, இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆண்டால் நாடு 50 வருடம் பின்னோக்கி செல்லும் என்றும், பரிமளா கூறியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பாஜவினர், அவருக்கு எதிராக போலீஸ் உதவியை நாடியுள்ளனர். தற்போது இதுபோன்ற பதிவு சமூக வலைத்தளத்தில் அதிகரித்து வருகிறது. எனவே சேலம் மாநகர காவல்துறை, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரம்தான் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது மிக கவனமாக கையாள வேண்டும். அல்லது கம்பி எண்ணும் நிலை வரும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பரிமளா இப்படி பதிவிட்டது அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+